×
 

டெல்லியா? தமிழ்நாடா? காங்., வேட்பாளர் தேர்வில் குடுமிப்பிடி சண்டை! கட்சிக்குள் நடக்கும் குழப்பம்!

அக்கட்சியின் மாநில தலைவர் உள்பட எம்எல்ஏக்கள் திமுகவுக்கு ஆதரவாகவும், எம்பிக்கள் ராகுலுக்கு விசுவாசமாகவும் இருக்கின்றனர்.

சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியில் வேட்பாளர் தேர்வு நடைபெறும் நிலையில், கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உள் பூசல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் குழப்பத்துக்கு முக்கிய காரணம் கட்சியில் நிலவும் ‘டெல்லி - தமிழ்நாடு’ என்ற பிரிவினை என்கின்றனர் கட்சி வட்டாரங்கள்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சில நாட்களுக்கு முன்பு, “வரும் சட்டமன்றத் தேர்தல் டில்லிக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலான போட்டி” என்று கூறியிருந்தார். அதாவது தமிழ்நாடு என்றால் திமுகவையும், டில்லி என்றால் பாஜகவையும் குறிப்பிடுவதாக பொருள். ஆனால், இப்போது ஒரே கட்சியான காங்கிரஸுக்குள் இதே பிரிவினை வலுவாகத் தெரிகிறது.

காங்கிரஸின் 17 எம்.எல்.ஏ.க்களை ‘தமிழ்நாடு அணி’ என்றும், 9 எம்.பி.க்களை ‘டெல்லி அணி’ என்றும் அழைக்கப்படுகிறது. எம்.எல்.ஏ.க்கள் பெரும்பாலும் திமுகவுக்கு நெருக்கமாகவும், மாநிலத் தலைவருடன் இணைந்தும் செயல்படுகின்றனர். மறுபுறம் எம்.பி.க்கள் ராகுல் காந்திக்கு விசுவாசமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச்! மாணிக்கம் தாகூர் ராஜினாமா ஏன்? காங்கிரசை உலுக்கும் பூகம்பம்!!

இந்தப் பிரிவினை காரணமாகவே, திமுகவுடன் கூட்டணி அமைத்தாலும் தமிழகத்தில் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று எம்.பி.க்கள் வலியுறுத்தி வருகின்றனர். மாணிக்கம் தாகூர் மற்றும் ஜோதிமணி உள்ளிட்ட எம்.பி.க்கள் இன்னும் இந்தக் கோரிக்கையில் உறுதியாக இருக்கின்றனர். மாநிலத் தலைமைக்கு எதிராகவும் அவர்கள் பேசி வருகின்றனர்.

ஆனால் எம்.எல்.ஏ.க்கள் இந்தக் கோரிக்கையில் பங்கேற்பதே இல்லை. கடந்த ஐந்து ஆண்டுகளாக திமுக அரசால் நல்ல முறையில் ‘கவனிக்கப்பட்ட’ எம்.எல்.ஏ.க்கள், திமுகவை எதிர்த்துப் பேச தயங்குகின்றனர். இதனால் கூட்டணிப் பேச்சுவார்த்தையின்போது காங்கிரஸால் வலுவான நிலைப்பாட்டை எடுக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.

டெல்லியிலிருந்து வந்த மேலிடப் பார்வையாளர் கிரிஷ் சோடங்கர் மற்றும் ராகுலின் நெருங்கிய நண்பரான பிரவீன் சக்கரவர்த்தி உள்ளிட்டோராலும் இந்தப் பிரிவினையை சரி செய்ய முடியவில்லை. இந்த உள் குஸ்தியின் விளைவாகவே காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

எம்.எல்.ஏ.க்கள் அணியும் எம்.பி.க்கள் அணியும் இடையேயான இந்தப் போட்டியில் இறுதியில் எந்த அணி வலுவாக நிற்கும் என்பது வேட்பாளர் பட்டியல் வெளியான பிறகே தெரியவரும். தமிழக காங்கிரஸின் இந்த உள் மோதல் கட்சியின் தேர்தல் தயாரிப்பை பாதிக்கும் அபாயம் உள்ளது.

இதையும் படிங்க: காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியாகும்?! ராகுல்காந்தி யோசிப்பது என்ன? தாமதம்? இழுபறி ஏன்?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share