×
 

வெறும் 4 மாசத்துல.. ஈரானை கற்காலத்திற்கு தள்ளிட்டோம்..!! அதிபர் டிரம்ப் அதிரடி பேச்சு..!!

ஈரானின் ராணுவத்திடம் 159 கப்பல்கள் இருந்தன. அவை தற்போது கடலுக்குள் மூழ்கடிக்கப்பட்டு விட்டன என்றார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரான் மீதான தொடர் தாக்குதல்கள் மூலம் அந்நாட்டின் ராணுவ திறனை முற்றிலும் அழித்துவிட்டதாக பெருமிதம் தெரிவித்துள்ளார். ஹார்மூஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அமெரிக்கா மேற்கொண்ட சமீபத்திய தாக்குதலில் ஈரானின் பெரும்பாலான ஆயுத உள்கட்டமைப்புகள் தகர்க்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக வான்வழித் தாக்குதலை தொடங்கின. இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கையில் ஈரானின் கடற்படை மற்றும் வான்படை பாதுகாப்பு அமைப்புகள் பெருமளவு சேதமடைந்தன. தொடர்ந்து நடைபெற்ற தாக்குதல்களில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரான் தரப்பில் இருந்து பதிலடி தாக்குதல்கள் நடத்தப்பட்டபோது, பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்தது. பல மாதங்களாக நீடித்த இந்த மோதல், அமைதிப் பேச்சுவார்த்தைகள் மூலம் தற்காலிகமாக தணிவடைந்தது.

எனினும், ஹார்மூஸ் ஜலசந்தியில் ஈரான் தனது கப்பல்கள் மூலம் திடீர் தாக்குதல் நடத்தியதை அடுத்து, அமெரிக்கா மீண்டும் வலுவான நடவடிக்கைக்கு தயாரானது. இந்த சம்பவம் சர்வதேச எண்ணெய் வழித்தடத்தின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்தது. டிரம்ப் தனது அறிக்கையில், “ஹார்மூஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்தை பாதுகாக்கும் நோக்கில் ஈரான் மீது புதிய தாக்குதல் நடத்தினோம். இதன் மூலம் ஈரானின் அதிகார மையங்கள் பெருமளவு அழிக்கப்பட்டுள்ளன” என்றார்.

இதையும் படிங்க: மீண்டும் வெடித்த மோதல்..!! ஈரானுடனான அமைதி ஒப்பந்தம் ரத்து.. அதிரடி காட்டும் அமெரிக்கா..!!

ஈரானிடம் இருந்த 159 கப்பல்கள் முழுமையாக கடலுக்குள் மூழ்கடிக்கப்பட்டதாக டிரம்ப் விவரித்தார். மேலும், 200 விமானங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டன. ரேடார் அமைப்புகள், வான்வழித் தாக்குதல் எதிர்ப்பு கருவிகள், ஆயுத உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்புகள் முற்றிலும் தகர்க்கப்பட்டுள்ளன. ஈரானின் மொத்த ராணுவ தளவாடங்களில் 84 சதவீதம் அழிக்கப்பட்டுவிட்டதாக அவர் தெரிவித்தார். நான்கு மாதங்களுக்குள் ஈரானை “கற்காலத்திற்கு” கொண்டு வந்துவிட்டதாக டிரம்ப் வலியுறுத்தினார்.

தற்போது ஈரானிடம் மிகச் சில ஏவுகணைகள் மட்டுமே எஞ்சியுள்ளதாகவும், அவர்களது தாக்குதல் திறன் கணிசமாகக் குறைந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நீண்டகாலமாக அச்சுறுத்தலாக இருந்த ஈரான், இனி அமெரிக்காவுக்கு எந்த விதமான அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது என்று டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த தாக்குதல்கள் சர்வதேச அளவில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன. பொதுமக்கள் இழப்பு குறித்த விமர்சனங்கள் எழுந்தாலும், அமெரிக்கா தனது நடவடிக்கையை “பாதுகாப்பு நடவடிக்கை” என விளக்கியுள்ளது. ஹார்மூஸ் ஜலசந்தி மூலமான உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தின் பாதுகாப்பு இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: மீண்டும் வெடித்த மோதல்..!! ஈரானுடனான அமைதி ஒப்பந்தம் ரத்து.. அதிரடி காட்டும் அமெரிக்கா..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share