அப்பாடா தொல்லை ஒழிஞ்சிது... இனி தினமும் 2 முறை மட்டுமே ... மத்திய அரசு அதிரடி முடிவு!
இனி சைபர் கிரைம் விழிப்புணர்வு காலர் டியூன் நாளொன்றுக்கு இரண்டு முறை மட்டுமே ஒளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு தொலைபேசி அழைப்பின் போதும் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த அந்த ஒரு விழிப்புணர்வு விளம்பரம் என்பது தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு, இதற்கு அடுத்தபடியாக அந்த சைபர் கிரைம் உடைய விழிப்புணர்வு மெசேஜ்கள் நாள் ஒன்றுக்கு இரண்டு முறை மட்டுமே ஒளிக்கப்படும் என்ற ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சகம் டிராயுன் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
நடிகர் அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் மற்றும் பிராந்திய மொழிகளில் அந்த ரெக்கார்ட் செய்யப்பட்ட அந்த ஒரு சைபர் கிரைம் விழிப்புணர்வு காலர் டியூன் என்பது இந்தியா முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சைபர் குற்ற வழக்குகள் குறித்த தகவல்களை பரப்புவதற்கான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக கொண்டுவரப்பட்டது.
ஒரு பயனாளர் ஒவ்வொரு முறை தொலைபேசி அழைப்பை மேற்கொள்ளும் பொழுதும் இந்த முன்பதிவு செய்யப்பட்ட செய்தியானது இயக்கப்படுவது வழக்கம். ஆனால் அவசர கால சூழல்களில் அழைப்பாளர்கள் உடனடியாக தொடர்பு கொள்ள முடியாததால், இந்த விழிப்புணர்வு விளம்பரமானது மிகப்பெரிய தொந்தரவாக இருந்து வந்தது. இதுகுறித்து ட்ராய் மற்றும் மத்திய அரசுக்கு பல்வேறு புகார்கள் முன்வைக்கப்பட்டன.
இதையும் படிங்க: இஸ்ரேல் - ஈரான் போர் முடிந்தும் காமெனி மிஸ்ஸிங்? உச்ச தலைவரை காணோம்..! ஈரானியர்கள் பதற்றம்..!
அது தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் அமிதாப் பச்சனுக்கு எதிராகவும் சமூக வலைத்தளங்களில் பரவப்பட்ட நிலையில் அந்த விவகாரத்திற்கு அடுத்தபடியாக தற்பொழுது இந்த ஒரு முடிவு என்பது எடுக்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு இரண்டு முறை மட்டுமே இந்த மெசேஜ்கள் இனிமேல் இயக்கப்படும் எனவும், மற்ற தொலைபேசி அழைப்புகளுக்கு அது வராது என்ற ஒரு அறிவிப்பையும் மத்திய அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: 15 வகையான மருந்துகளுக்கு தடை... காரணம் இதுதானாம்... கர்நாடக அரசு அதிரடி உத்தரவு!!