×
 

உயிரிழப்புகளுக்கு கூட்ட நெரிசல் தான் காரணம்... மன்னிப்பு கேட்ட டி.கே. சிவகுமார்!

பெங்களூருவில் கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்த விவகாரத்திற்கு கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே சிவக்குமார் மன்னிப்பு கேட்டுள்ளார்.

ஐபிஎல் கோப்பையை வென்ற ஆர் சி பி அணி வீரர்களுக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி விதான் சவுதா பகுதியில் நடைபெற்றது. மேலும் சின்னசாமி மைதானத்தில் ஏராளமான ரசிகர்கள் குவிந்துள்ளனர். கட்டுக்கடங்காத கூட்டத்தில் சிக்கி ரசிகர்கள் 10 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் 6 பேர் நிலைமை கவலைகிடமாக உள்ளதாகவும் 50 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அரசியல் ஆதாயம் தேட முயன்றதால் ஏற்பட்ட சோகம் இது என்று பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன. கர்நாடகா காங்கிரஸ் அரசின் அலட்சிய போக்கால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் பெருமளவில் ரசிகர்கள் திரளுவார்கள் என தெரிந்தும் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்றும் கர்நாடகா பாஜக கடுமையாக விமர்சித்தது.

இதையும் படிங்க: இந்த கிரீடம் உங்களுக்கு தான் கோலி.. சென்னை "DON'T GIVE UP"! முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..!

கூட்டம் கட்டுக்கடங்காமல் திரண்டதால் ஏற்பட்ட சோகம் என்றும் பாதுகாப்புக்காக ஐந்தாயிரம் போலீசார் நிறுத்தப்பட்டதாகவும் கர்நாடக துணை முதலமைச்சர் டி கே சிவக்குமார் விளக்கமளித்தார். இந்த சம்பவத்திற்கு தான் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் கூறினார்.

இதையும் படிங்க: இந்த கிரீடம் உங்களுக்கு தான் கோலி.. சென்னை "DON'T GIVE UP"! முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share