“தவெக ஆட்சி அமைக்க இடையூறு செய்ய மாட்டோம்... ஆனா...” - விஜய்க்கு ஸ்டாலின் போட்ட 2 கன்டிஷன்கள்...!
இன்னொரு சட்டப்பேரவை தேர்தலை திமுக விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
தனி பெரும்பான்மை பெற்றுள்ள தவெக ஆட்சி அமைப்பதற்கு திமுக இடையூறு செய்யாது என மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். உடனடியாக இன்னொரு சட்டப்பேரவை தேர்தலை திமுக விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
திமுக தலைவர் ஸ்டாலின் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு அளித்த நேர்காணலில், இன்னொரு தேர்தலை தமிழ்நாடு தாங்குவதற்கு நாங்கள் அதற்கான ஒத்துழைப்பை தரமாட்டோம் என்றும் தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்கட்டும், ஆறு மாதங்களுக்கு பிறகு பார்த்து கொள்ளலாம் என்றும் தற்போது கூறியிருப்பதாக தகவல் சொல்லப்படுகிறது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் யாருக்கும் தனி மெஜாரட்டி கிடைக்காமல் தற்போது மூன்று கட்சிகளுக்குமே சராசரியாக தமிழக வெற்றி கழகத்திற்கு 108 இடங்களும், திமுகவிற்கு தனியாக 59 இடங்களும், அதிமுகவிற்கு தனியாக 47 இடங்களையும் வென்றுள்ளது.
இதனால் பெரும்பான்மை என்பது கிடைக்காமல் அதிமுக, திமுகவுடன் இணைந்து மீண்டும் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக நேற்றிய தினம் செய்திகள் வெளியாகின. அதற்கு முழு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்போது முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் அவர்கள் இந்த கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இதன் மூலம் தமிழக வெற்றி கழகத்திற்கு இடையூறாக எந்த ஒரு சூழலையும் ஏற்படுத்த மாட்டோம் என்று அவர் கூறுவதன் மூலமாக தற்போது இருக்கக்கூடிய சூழலில் ஆதிமுகா திமுகா தயவில் ஆட்சி அமைக்கும் என்று சொல்லப்பட்ட கருத்து முற்றிலும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழக முதல்வராகும் விஜய்..! தொங்கு சட்டசபை... பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசம்..!
தற்போது இருக்கக்கூடிய சூழ்நிலையில் தமிழ்நாடு மீண்டும் ஒரு தேர்தலை சந்திப்பதற்கான எந்த ஒரு சாத்திய கூறுகளும் இல்லை என்றும், அதேபோல தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்க திமுக ஒருபோதும் இடையூறாக இருக்காது என்றும் தற்போது இருக்கக்கூடிய சூழலில் அதற்கான தேவையும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
அதேபோல திமுக தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைப்பதற்கான எந்த தடைகளை உருவாக்கும் என்று கூறப்பட்டதற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த கருத்து அமைந்துள்ளது. எனவே இனி தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைப்பதற்கான எந்த ஒரு இடையூறுகளும் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் திமுக சார்பில் இதுவரை எந்த ஒரு இடையூறுகளும் தவெகவிற்கு செய்யாத ஒரு சூழலில் தனி மெஜாரிட்டி கிடைக்காமல் இருக்கக்கூடிய சூழலில், தற்போது தவெக இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் மற்றும் விசிகவின் ஆதரவை கேட்டிருக்கிறார்கள்.
அது கொடுத்து இரண்டு நாட்களில் தங்களுடைய முடிவை கூறுவோம் என்று அந்த மூன்று கட்சிகளும் கூறியிருக்கும் நிலையில் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவாக இந்த மூன்று கட்சிகளும் முடிவெடுக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதற்கு நாங்கள் ஒருபோதும் இடையூறாக இருக்க மாட்டோம் என்று திமுக தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். தொடர்ந்து இன்றைய தினம் முன்னதாகவே விஜய் ஆட்சி அமைப்பார் என்று தெரிவிக்கப்பட்ட சூழலில் நேற்று திமுக மற்றும் ஆதிமுக இருவரும் கூட்டணி ஆட்சி அமைப்புக்கு போவதாக செய்திகள் வெளியாகின. அதனை அப்போதே மறுத்த திமுக தலைமை ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என தெரிவித்திருந்தது.
மேலும் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தை தடையின்றி தொடர வேண்டும் என்றும், மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் அறிவித்தது போல் மகளிருக்கு மாதம் ரூ.2500 வழங்குவது சாத்தியமற்றது என்பதால், திமுக அரசு கொண்டு வந்த மகளிர் உரிமைத் தொகை திட்டத்தையே தொடர வேண்டும் எனக்கூறியுள்ளார்.
இதையும் படிங்க: "C. ஜோசப் விஜய் எனும் நான்"...! தமிழகமே எதிர்பார்த்த தருணம்..! நாளை முதல்வராக பதவி ஏற்கும் விஜய்..!