×
 

காலையிலேயே இன்ப அதிர்ச்சி... முதல்வரின் WOW அறிவிப்பு... கூட்டணி கட்சிகள் வரவேற்பு..!

மகளிர் உரிமை தொகை உயர்வு குறித்த முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகளிர் உரிமை தொகை 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்ற முதலமைச்சர் அறிவித்துள்ள வாக்குறுதி வரவேற்கத்தக்கது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை தெரிவித்துள்ளார். இதேபோல் ஐந்தாயிரம் ரூபாய் வரவு வைப்பது மற்றும் உரிமைத்தொகை 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்ற முதலமைச்சர் ஸ்டாலின் அளித்த வாக்குறுதிக்கு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

உரிமை தொகை அடுத்த இரண்டு மாதங்களுக்கு கிடைக்கக்கூடாது என சதி செய்த பாஜகவின் செயல் மற்றும் அதிமுகவின் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் முறியடித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 1.31 கோடி பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை 5000 ரூபாய் வரவு வைக்கப்பட்டதை வரவேற்பதாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் வரவேற்றுள்ளார்.

நேரடி பண பரிவர்த்தனை மூலம் வழங்கப்படும் மகளிர் உரிமைத் தொகை உள்ளூர் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இதைப்போல் பிப்ரவரி மார்ச் ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணம் 3 ஆயிரம் ரூபாய் மற்றும் கோடைகால சிறப்பு தொகுப்பு 2000 ரூபாய் வரவேற்பு வரவு வைக்கப்பட்டு இருப்பதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு மகளிர் வெல்லும் தமிழ் பெண்கள் ஆக நடைபோட என்றும் துணை நிற்போம் எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மகளிர் ஓட்டுகளை குறிவைக்கும் கட்சிகள்..! உரிமை தொகையை வாரி வழங்கும் சீக்ரெட் பிளான்..!

தமிழகமெங்கும் ஐந்தாயிரம் ரூபாய் என்பதே பேச்சாக இருக்கிறது என்றும் சிபிஎம் சார்பில் மகிழ்ச்சியுடன் முதலமைச்சர் ஸ்டாலின் அளித்த வாக்குறுதியை வரவேற்பதாகவும் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். உரிமைத்தொகை பெறக்கூடிய அனைத்து குடும்பங்களிலும் மட்டற்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் காட்சியை காண்பதாகவும் காலையிலேயே முதலமைச்சர் ஸ்டாலின் இன்ப அதிர்ச்சி கொடுத்து விட்டார் என்றும் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: ஸ்டாலினுக்கு தோல்வி பயம்...! மகளிர் தொகை உயர்வுக்கு இதுதான் காரணம்... ஜெயக்குமார் விளாசல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share