ஸ்டன் ஆன சென்னை... காலையிலேயே கொத்து, கொத்தாய் கைது... மதுரை, நெல்லை, கோவை, சேலத்திலும் தொடரும் அதிர்ச்சி...!
சென்னை எழும்பூரில் த.வெ.க அமைச்சர் சரத்குமாரை கண்டித்து திமுக மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த தமிழ்நாடு மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் சரத்குமார் பொதுவெளியில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டி, அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு முழுவதும் திமுக மாணவரணி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த போராட்டத்திற்கு முறையான அனுமதி பெறவில்லை எனக்கூறி திமுகவினரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து வருகின்றனர்.
சென்னை எழும்பூரில் த.வெ.க அமைச்சர் சரத்குமாரை கண்டித்து திமுக மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர். போராட்டத்திற்கு அனுமதி இல்லாததால் கலைந்து செல்ல வலியுறுத்தியும், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் வலுக்கட்டயமாக இழுத்துச் சென்று காவல்துறை வாகனங்களில் ஏற்றி அப்புறப்படுத்தினர்.
கடந்த திமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர் சிவசங்கர். இவரிடம் உதவியாளராக இருப்பதாக கூறி இளஞ்செழியன் என்பவர் சென்னையை சேர்ந்த சீனிவாசன் என்பவரிடம் அவரது மகனுக்கு மாநகர போக்குவரத்து கழகத்தில் பணிவாங்கி தருவதாக கூறி சிறிது சிறிதாக 25 லட்சம் ரூபாய் பெற்றதாக கூறப்படுகிறது. கடந்த 2023ஆம் ஆண்டிலிருந்து 2025ஆம் ஆண்டு வரை இந்த பணம் பெறப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் இளஞ்சழியன் பேசியபடி மாநகர போக்குவரத்து கழகத்தில் பணி பெற்று கொடுக்கவில்லை. வாங்கிய பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. மேலும் பணத்தை திருப்பி கேட்ட சீனிவாசனை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதை எடுத்து சீனிவாசன் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையில் புகார் அளித்தார்.
இதையும் படிங்க: விடிந்ததுமே திமுக தலையில் இடியை இறக்கிய தவெக.... குண்டுக்கட்டாய் திமுகவினர் கைது... காரணம் என்ன?
புகாரின் பெயரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் முன்னாள் அமைச்சர் சிவசங்கரின் நேர்முக உதவியாளர் என்று கூறிய அரியலூரைச் சேர்ந்த இளஞ்செழியனை அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் இருந்து இருவேறு தமிழ்நாடு அரசு அடையாள அட்டைகள் கைப்பற்றப்பட்டது. ஒன்றில் அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் என்றும் மற்றொன்றில் மாவட்ட கல்வி அதிகாரி நுங்கம்பாக்கம் என்றும் இருந்தது. அவை இரண்டும் ஒரிஜினலா அல்லது போலியா? இதை பயன்படுத்தி எத்தனை பேரிடம் இளஞ்செழியின் மோசடியில் ஈடுபட்டார் என்பது குறித்து போலீசார் விரிவான விசாரணையை முன்னெடுத்திருக்கிறார்கள்.
கடந்த ஆட்சியில் ஊழல் மற்றும் முறைக்கேடுகள் நடந்திருந்தால் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன் என்று முன்னாள் அமைச்சர் சிவசங்கர் கேள்வி எழுப்பி இருந்த நிலையில் அவரது பெயரைச் சொல்லி 25 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக ஒருவரை போலீசார் கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் யார் என்றே தனக்கு தெரியாது என்றும் இளஞ்செழியன் என்ற பெயரில் தன்னிடம் எந்த ஒரு உதவியாளரும் இருந்ததில்லை என்றும் சிவசங்கர் மறுப்பு தெரிவித்திருந்தார்.
இதனிடையே, முன்னாள் அமைச்சர் சிவசங்கரின் ஆசிரியை தனது தாய் என்றும், பலமுறை சிவசங்கருடன் இளஞ்செழியன் போனில் தொடர்பு கொண்டு பேசியதே தனக்கு நம்பிக்கை ஏற்படக் காரணம் என்றும் ஓய்வு பெற்ற எஸ்.எஸ்.ஐ. தனது புகாரில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து 100 கோடி ரூபாய் வரை மோசடி நடந்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கும் தொடர்பு இருப்பதாக காவல்துறையினர் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கொடுத்த பணம் வந்து சேர்ந்துவிட்டது என சிவசங்கர் இளஞ்செழியனுக்கு உறுதி அளித்த தகவல் இருப்பதாகவும் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளதால் திமுகவிற்கு பேரதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இதேபோல் மதுரை, நெல்லை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் தி.மு.க-வினரை வலுக்கட்டாயமாக கைது செய்து வருகின்றனர். ஈரோடு காளை மாட்டு சிலை அருகே, அமைச்சர் சரத்குமார் பதவி நீக்க கோரி ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 100.க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். சிவகங்கையில் திராவிட முன்னேற்ற கழக மாணவரணி சார்பில் மாவட்ட கழக செயளாலர் முன்னாள் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் முன்னிலையில் தமிழக அமைச்சர் சரத்குமாரைக் கண்டித்து சிவகங்கை சண்முகராஜா கலையரங்கில் கண்டன ஆர்ப்பாட்டம நடத்த பேரணியாக சென்ற திமுகவினர் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: முதல்வர் விஜய் சந்திக்க மறுப்பு! கட்சி தாவிய அதிமுக மாஜிக்கள் ஏமாற்றம்!