பெண்கள் ஓட்டுகளுக்கு குறி..!! மகளிர் உரிமை தொகையில் தான் ட்விஸ்ட்டே.!! திமுக மாஸ்டர் பிளான்..!!
'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' திட்டத்தில் மிகப்பெரிய மாற்றங்களை அறிவிக்கத் திமுக தயாராகி வருகிறது.
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆளும் திமுக அரசு பெண் வாக்காளர்களை கவரும் வகையில் தனது தேர்தல் உத்திகளை தீவிரப்படுத்தி வருகிறது. குறிப்பாக, 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' திட்டத்தை மேலும் வலுப்படுத்தி, பெரும் மாற்றங்களை கொண்டு வர தயாராகி உள்ளது.
இத்திட்டத்திற்கான தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு, திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி தலைமையில் செயல்பட்டு வருகிறது. இக்குழுவில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி. ராஜா உள்ளிட்ட 11 முக்கிய உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பொதுமக்கள், வணிகர்கள், விவசாயிகள் ஆகியோரிடம் கருத்துகளை சேகரித்து வருகின்றனர்.
மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு AI இணையதளம் (dmk.in/manifesto2026) ஒன்றை தொடங்கி, மக்களின் கோரிக்கைகளை நேரடியாக பெற்று வருகிறார். தற்போது மாதம் ரூ.1,000 வழங்கப்படும் இத்திட்டத்தில், அடுத்த ஆட்சியில் ரூ.2,000 ஆக உயர்த்தப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்துள்ளார். இது எதிர்க்கட்சியான அதிமுகவின் 'குலவிளக்கு' திட்ட வாக்குறுதிக்கு (ரூ.2,000) நேரடி பதிலடியாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: அக்கவுண்டில் வந்த ரூ.5000-ஐ திருப்பி எடுக்கிறதா தமிழக அரசு..!! TN Fact Check சொல்வது என்ன..??
சமீபத்தில், பிப்ரவரி 13-ஆம் தேதி சுமார் 1.31 கோடி பெண்களுக்கு ரூ.5,000 (மூன்று மாத முன்பணம் ரூ.3,000 + ரூ.2,000 சிறப்பு கோடை உதவித் தொகை) ஒரே தவணையாக வழங்கப்பட்டது. இது தேர்தலுக்கு முன்பே வாக்குறுதியை நிறைவேற்றும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. தற்போது 1.31 கோடி பெண்கள் இத்திட்டத்தில் பயனடைந்து வருகின்றனர்.
ஆனால், வருமான வரி செலுத்துபவர்கள், கார் உரிமையாளர்கள் போன்ற நிபந்தனைகள் காரணமாக பல லட்சம் பெண்கள் விலக்கப்பட்டுள்ளனர். வரும் தேர்தல் அறிக்கையில் இந்த நிபந்தனைகளை கணிசமாக தளர்த்தி, பயனாளிகள் எண்ணிக்கையை பெருமளவு அதிகரிக்க திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, சுமார் 50 லட்சம் முதல் 1 கோடி வரை புதிய பெண்களை திட்டத்தில் இணைக்க முனைப்பு காட்டப்படும்.
கிட்டத்தட்ட அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் உதவி கிடைக்கும் வகையில் விதிகள் எளிமைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் பெண் வாக்காளர்கள் முடிவெடுக்கும் சக்தி கொண்டவர்களாக உள்ளனர். இத்திட்டத்தின் மூலம் தற்போது ஒட்டுமொத்த வாக்காளர்களில் சுமார் நான்கில் ஒரு பங்கு பெண்கள் (1.31 கோடி) நேரடியாக பயன்பெறுகின்றனர். இது தேர்தல் களத்தில் திமுகவுக்கு பெரும் அணுகலத்தை அளிக்கும் என அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
எதிர்க்கட்சிகள் இதை 'தேர்தல் நாடகம்' என விமர்சித்தாலும், பெண்களுக்கு நேரடி நிதி உதவி சென்றடைவது வாக்கு மாற்றத்தை ஏற்படுத்தும். அரசியல் ஆலோசகர்களின் மதிப்பீட்டின்படி, இத்திட்டம் 5% முதல் 8% வரை வாக்கு மாற்றத்தை (swing) உருவாக்க வாய்ப்புள்ளது. 'திராவிட மாடல்' அடிப்படையில் பெண்களை மையப்படுத்திய இந்த அணுகுமுறை, தேர்தல் முடிவுகளை பாதிக்கும் முக்கிய காரணியாக உருவெடுத்துள்ளது.
இதையும் படிங்க: அக்கவுண்ட்ல இன்னும் ரூ.5000 வரலையா..?? அப்போ உடனே இத பண்ணுங்க..!! வெளியான முக்கிய தகவல்..!!