×
 

ரூ.3,716 கோடி வீட்டை முடக்கியாச்சு! ரூ.15,700 கோடி சொத்து ஃப்ரீஷ்!! அனில் அம்பானி பிடியை இறுக்கும் அமலாக்கத்துறை!

ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானியின் 3,716 கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை அமலாக்கத்துறையினர், சட்டவிரோத பணமோசடி வழக்கில் பறிமுதல் செய்து உள்ளனர்.

மும்பை: ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானியின் (66) மும்பை பாலி ஹில் பகுதியில் உள்ள சொகுசு வீடு 'அபோட்' (Abode) அமலாக்கத்துறை (ED) வசம் சென்றுள்ளது.

இந்த 17 தளங்கள் கொண்ட, 66 மீட்டர் உயரமுள்ள பங்களாவின் மதிப்பு ரூ.3,716.83 கோடி. PMLA (சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டம்) கீழ் நேற்று (பிப்ரவரி 25, 2026) இந்த பறிமுதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் அனில் அம்பானி தொடர்பான மொத்த பறிமுதல் சொத்து மதிப்பு ரூ.15,700 கோடியை தாண்டியுள்ளது.

இந்த வழக்கு ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (RCOM) நிறுவனத்தின் வங்கி கடன் மோசடி தொடர்பானது. CBI FIR அடிப்படையில் ED விசாரணை நடத்தி வருகிறது. 2017-2019 காலத்தில் யெஸ் வங்கி மூலம் ரூ.2,965 கோடி கடன் வாங்கிய அனில் அம்பானி, அதை சட்டவிரோதமாக மற்ற நிறுவனங்களில் முதலீடு செய்ததாக குற்றச்சாட்டு.

இதையும் படிங்க: வெளிநாடு தப்பிச் செல்ல மாட்டேன்! அனில் அம்பானி உத்தரவாதம்! சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல்!

மொத்தம் ரிலையன்ஸ் குழும நிறுவனங்களுக்கு ரூ.40,185 கோடி கடன் வாராக்கடனாக அறிவிக்கப்பட்டது. இதில் ரூ.11,000 கோடி முறைகேடு நடந்ததாக ED கண்டறிந்தது.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் இன்ப்ராடெல், ரிலையன்ஸ் டெலிகாம் உள்ளிட்ட நிறுவனங்களுக்காக வாங்கிய கடன்களை சட்டவிரோதமாக பயன்படுத்தியதும் தெரிய வந்தது.

சுப்ரீம் கோர்ட் உத்தரவின் பேரில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. வழக்கு விசாரணை நடந்தபோது, வெளிநாடு செல்லாமல் இருப்பதாக அனில் அம்பானி உறுதி அளித்திருந்தார்.

இந்த 'அபோட்' பங்களா ஹெலிபேட், ஸ்விம்மிங் பூல், ஜிம் உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்பட்ட சொகுசு வீடு. ஏற்கனவே இதன் ஒரு பகுதி (ரூ.473.17 கோடி) நவம்பர் 2025-ல் பறிமுதல் செய்யப்பட்டது. இப்போது முழு சொத்தும் ED கட்டுப்பாட்டுக்கு வந்துள்ளது. பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அனில் அம்பானி தொடர்பான வழக்கில் ED-யின் இந்த அதிரடி பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அவர் நேற்று ED-யில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைத்தார். இந்த பறிமுதல் அவரது குழும நிறுவனங்களின் நிதி முறைகேடுகளை மேலும் வெளிச்சத்துக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழிலதிபர்களின் பெரும் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் நிலை தொழில் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தோழர் நல்லகண்ணுவுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை... முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share