இனி 'NO' உப்புமா.. மெனுவில் முட்டை பிரியாணி சேர்த்தாச்சு.. சிறுவன் ஷன்கு ஹேப்பி அண்ணாச்சி..!
கேரளாவில் 3 வயது சிறுவன் ஷன்குவின் கோரிக்கையை ஏற்று, அங்கன்வாடி உணவுப் பட்டியலில் முட்டை பிரியாணி சேர்க்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு அரசு சார்பாக சத்தான உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகம் மட்டுமின்றி பல மாநிலங்களில் மாணவர்களுக்கு முட்டை, பயிறு உள்ளிட்ட சத்தான உணவுகள் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அங்கான்வாடி மையத்தில் வழங்கப்படும் உணவு பட்டியலில் சில உணவு வகைகளை சேர்க்க வேண்டும் என சுட்டி சிறுவன் ஒருவன் கோரிக்கை விடுத்த வீடியோ ஒன்று வைரலானது. கேரள மாநிலம் ஆலப்புழாவில், தேவிகுளங்கரை பஞ்சாயத்தில் உள்ள அங்கன்வாடியில் படிக்கும் த்ரிஜல் எஸ். சுந்தர் என்ற 3 வயது சிறுவன் ஷன்கு, இங்கு வழங்கப்படும் உப்புமா வேண்டாம் அதற்கு பதில் பிரியாணி மற்றும் பொரித்த கோழி வேண்டும் என தனது மழலை குரலில் அழகாக கேட்டுள்ளான். இந்த கியூட்டான வீடியோ வைரலாக பரவ, இதனை பரிசீலிப்பதாக கேரள அரசின் சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: எங்கள் இளைய காமராஜரே...! விஜயை ஆஹா..ஓஹோ.. என புகழ்ந்த மாணவி!
இந்நிலையில் ஷங்குவின் கோரிக்கையை ஏற்று, கேரள அரசு அங்கன்வாடி மையங்களில் உணவு மெனுவை மேம்படுத்த முடிவு செய்தது. அதன்படி முட்டை பிரியாணி, புலாவ், பருப்பு பாயாசம், சோயா கறி மற்றும் ஊட்டச்சத்து மிக்க சத்து உருண்டை ஆகியவை புதிய மெனுவில் சேர்க்கப்பட்டன. இந்த மாற்றம் குழந்தைகளுக்கு சுவையான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
மேலும், கேரள அங்கன்வாடி மையங்களில் இதற்கு முன் வழங்கப்பட்டு வந்த உணவுகள், உப்புமா, கஞ்சி போன்றவை, சத்து நிறைந்தவை என்றாலும், குழந்தைகளுக்கு சுவை அளவில் பிடித்தமானவையாக இல்லை என்ற பேச்சுக்கள் எழுந்துகொண்டு இருந்தது.
அதே சமயம் சிறுவன் ஷங்குவின் வீடியோ இந்த பிரச்சனையை ஒரு முடிவுக்கு கொண்டு வந்தது. சிறுவனின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என அமைச்சர் உறுதியளித்த நிலையில் தற்போது சொன்ன வாக்கை காப்பாற்றிய அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
இதையும் படிங்க: நெக்ஸ்ட் இரும்பு, அலுமினியம்.. அடுத்தடுத்த வரிவிதிப்பில் இறங்கிய அதிபர் டிரம்ப்..!