×
 

விறுவிறு SIR... நாடு முழுவதும் 32.23 கோடி SIR படிவங்கள் டிஜிட்டல் மயமாக்கம்... தேர்தல் ஆணையம் அறிவிப்பு...!

நாடு முழுவதும் 32.23 கோடி SIR படிவங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இறந்தவர்கள், மாற்று இடத்திற்கு சென்றவர்கள், புதியவர்கள் என பல்வேறு விஷயங்களை கருத்தில் கொண்டு பெயர் திருத்தம், முகவரி மாற்றம் என திருத்தப் பணிகள் நடைபெறுவது வழக்கம். 

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்கின்றன. காரணம் தேர்தல் ஆணையம் பாஜக அரசுக்கு துணையாக செயல்படுவதாகவும் வாக்காளர் திருத்த பணிகள் மூலம் பொதுமக்களின் வாக்குரிமை பறிக்கப்படும் என்ற குற்றம் சாட்டி வருகின்றனர். அது மட்டுமல்ல அது வாக்குத்திருட்டு நடைபெற்று இருப்பதாக மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பல்வேறு ஆதாரங்களை வெளியிட்டு பேசி வருகிறார். இருப்பினும் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நிச்சயம் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்தது.

இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி இரண்டாம் கட்டமாக 12 மாநிலங்களில் நடத்தப்பட உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்தார். பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் SIR பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: S.I.R. பணிகளில் குளறுபடி... இப்படியா பண்ணுவீங்க? ஆதங்கத்தை வெளிப்படுத்தும் வாக்காளர்கள்...!

நாடு முழுவதும் 32.23 கோடி SIR படிவங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 12 மாநிலங்களில் இதுவரை 50. 60 கோடி பேருக்கு எஸ் ஐ ஆர் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

இதையும் படிங்க: எந்த வாக்காளரையும் காரணம் இல்லாமல் நீக்க முடியாது... புரிஞ்சுக்கோங்க..! தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share