"காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரம் இது"..!! PF அக்கவுண்ட் வெச்சிருக்கீங்களா..?? அடிச்சது ஜாக்பாட்..!!
இந்தியாவில் பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் தனியார் ஊழியர்களுக்கு அவர்களுடைய பிஎஃப் கணக்கில் அடுத்த மாத இறுதியில் வட்டி பணம் கிடைக்கப் போகிறது.
இந்தியாவில் தனியார் துறையில் பணியாற்றும் லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு ஓய்வுக்காலத்தில் நிதி பாதுகாப்பு வழங்குவதற்காக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) திட்டம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஊழியருக்கும் தனிப்பட்ட EPF கணக்கு தொடங்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் ஊழியரின் அடிப்படை சம்பளம் மற்றும் டியர்னஸ் அலவன்ஸ் ஆகியவற்றில் 12 சதவீதம் ஊழியர் பங்களிப்பாகவும், அதே அளவு முதலாளி பங்களிப்பாகவும் (இதில் சில பகுதி பென்ஷன் திட்டத்திற்கு செலுத்தப்படும்) இந்தக் கணக்கில் சேர்க்கப்படுகிறது.
இந்த பங்களிப்புகளுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் வட்டி வழங்குகிறது. வட்டி விகிதம் ஒவ்வொரு நிதியாண்டின் முடிவில் மார்ச் 31 அன்று கணக்கிடப்பட்டு, ஊழியர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும். தற்போது 8.25 சதவீத வட்டி விகிதம் அமலில் உள்ளது. இந்த விகிதம் கடந்த இரு ஆண்டுகளாகவே தொடர்ந்து நீடித்து வருகிறது.
இதையும் படிங்க: திமுக - காங்கிரஸ் கூட்டணி? நள்ளிரவில் நடந்த ரகசிய மீட்டிங்?! அரசியல் சதுரங்கத்தில் காய் நகர்த்தும் வேணுகோபால்!!
இந்த ஆண்டுக்கான வட்டி விகிதம் குறித்த முடிவு விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) மத்திய நம்பிக்கை வாரியக் கூட்டம் (Central Board of Trustees) மார்ச் 2-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் 2025-26 நிதியாண்டுக்கான EPF வட்டி விகிதம் இறுதி செய்யப்படும். அதன்பின் நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுடன் இந்த வட்டி ஊழியர்களின் கணக்குகளில் சேர்க்கப்படும்.
இதனால் அடுத்த மாத இறுதிக்குள் லட்சக்கணக்கான தனியார் ஊழியர்களுக்கு அவர்களது EPF கணக்கில் வட்டித் தொகை வரவு வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பல்வேறு ஊடக அறிக்கைகளின்படி, 8.25 சதவீத வட்டி விகிதம் மாற்றமின்றி தொடரும் வாய்ப்பே அதிகம் உள்ளது. இது மூன்றாவது ஆண்டாக தொடர்ச்சியாக நிலைத்திருக்கும். கடந்த ஆண்டு ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை குறைத்ததால் வங்கி சேமிப்பு வட்டிகள் குறைந்தன. இதனால் EPF வட்டியும் குறையலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால், EPFO-வின் முதலீட்டு வருமானம் போதுமான அளவு உள்ளதால், அரசியல் காரணங்களுடன் (சில மாநிலங்களில் தேர்தல்கள் நடைபெறவுள்ளன) விகிதத்தை குறைக்காமல் தக்க வைக்க வாய்ப்பு அதிகம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. EPFO தற்போது சுமார் 28 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேலான நிதியை நிர்வகித்து வருகிறது. இந்த நிதி அரசு பத்திரங்கள், கார்ப்பரேட் பத்திரங்கள், ETFகள் உள்ளிட்ட பாதுகாப்பான முதலீடுகளில் பயன்படுத்தப்படுகிறது.
இதனால் நிலையான வருமானம் கிடைக்கிறது.உதாரணமாக, ஒரு ஊழியரின் EPF கணக்கில் 5 லட்சம் ரூபாய் இருந்தால், 8.25 சதவீத வட்டியின்படி சுமார் 41,250 ரூபாய் (தோராயமாக 40,000 ரூபாய்) ஆண்டு வட்டியாக சேரும். இது காம்பவுண்ட் வட்டி முறையில் ஆண்டுதோறும் வளர்ந்து, ஓய்வு காலத்தில் கணிசமான தொகையாக மாறும். இத்திட்டம் ஊழியர்களுக்கு ஓய்வுக்கால பாதுகாப்பை உறுதி செய்வதோடு, நீண்டகால சேமிப்பையும் ஊக்குவிக்கிறது.
இதையும் படிங்க: கேப்டன் ஆன்மா மன்னிக்கவே மன்னிக்காது..!! தேமுதிகவை கடுகடுத்த தமிழக பாஜக..!!