×
 

தலைக்கு மேல் தொங்கும் கத்தி! செங்கோட்டையனை ஆதரிக்கும் Ex. MPக்கு ஆப்பு வைத்த இபிஎஸ்

செங்கோட்டையனுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் முன்னாள் எம்பி சத்திய பாமா உள்ளிட்ட நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஈரோடு மாவட்டம் கோபிச் செட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்து மனம் திறந்து பேசினார். அப்போதும் கட்சியிலிருந்து விலகியவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இரண்டு வாய்ப்புகள் கிடைத்த போதும் இயக்கம் உடைந்து விடக்கூடாது என்பதற்காக தனது பணிகளை மேற்கொண்டதாகவும் கூறினார். வெளியே சென்றவர்களை அரவணைத்தால் மட்டுமே தேர்தலை சந்திக்க முடியும் என கூறியதாகவும் ஆனால் அதனை எடப்பாடி பழனிச்சாமி புறக்கணித்து விட்டதாகவும் தெரிவித்தார்.

 நல்லாட்சி தமிழகத்தில் தருவதற்கு எல்லோரையும் அழையுங்கள் என்றும் வெளியே சென்றவர்களை நம் கழகத்தில் இணைத்துக் கொள்ளுங்கள் என்றும் தெரிவித்தார். அப்படி செய்யவில்லை என்றால் அவர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபடுவேன் எனவும் எடப்பாடி பழனிச்சாமி நடத்தும் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க மாட்டேன் எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும் 10 நாட்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு கெடு விதித்து இருந்தார்.

அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையனை நீக்கி எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடப்பட்டது. அதுமட்டுமல்லாது செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் ஏழு பேரை கட்சிக் பொறுப்பில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி அதிரடியாக நீக்கம் செய்துள்ளார். ஆனால், கட்சியை ஒருங்கிணைக்கும் முயற்சியை தொடர்ந்து மேற்கொள்வேன் என்று செங்கோட்டையன் தெரிவித்தார். இந்த நிலையில் செங்கோட்டையனுக்கு ஆதரவாக முன்னாள் எம்பி சத்யபாமா இருந்து வருகிறார். செங்கோட்டையன் மனம் திறந்து பேசுவதற்கு முன்பாக அவரை சத்யபாமா நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பிலும் உடன் இருந்த சத்தியபாமா, நேற்றைய தினம் செங்கோட்டையன் கொடுத்திருந்த இரண்டாவது செய்தியாளர் சந்திப்பிலும் உடன் இருந்தார்.

இதையும் படிங்க: செங்கோட்டையன் எண்ணம் இதுதான்... உண்மையை போட்டு உடைத்த EX. MP சத்யபாமா

செங்கோட்டையனுக்கு ஆதரவாக செயல்படும் நிர்வாகிகளை கட்சி பதவியிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி நீக்கி வருகிறார். அதன்படி செங்கோட்டையனுக்கு ஆதரவாக செயல்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா உள்ளிட்ட இதர நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: செங்கோட்டையன் எண்ணம் இதுதான்... உண்மையை போட்டு உடைத்த EX. MP சத்யபாமா

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share