இலங்கை சிறையில் வாடும் மீனவர்கள்... கூட்டுப் பணிக் குழுவை ஏற்படுத்துங்க... முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்...!
இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையேயான கடல் எல்லை, சர்வதேச கடல் எல்லைக் கோடு மூலம் வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த எல்லை பாக் நீரிணை மற்றும் மன்னார் வளைகுடாவில் வெறும் 12 கடல் மைல்கள் தொலைவில் உள்ளது. இந்தப் பகுதி மீன்வளம் மிக்கது என்பதால், தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள், குறிப்பாக ராமநாதபுரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கன்னியாகுமரி போன்ற கடலோர மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இங்கு மீன்பிடிக்கச் செல்கின்றனர்.
ஆனால், கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை மீனவர்களை கைது செய்கிறது, அவர்களின் படகுகளையும் மீன்பிடி உபகரணங்களையும் பறிமுதல் செய்கிறது. தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யும் சம்பவங்கள் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து நிகழ்ந்து வரும் ஒரு சிக்கலான பிரச்சினையாக உள்ளது. இந்தியா மற்றும் இலங்கை இடையேயான கடல் எல்லையான பாக் நீரிணை மற்றும் மன்னார் வளைகுடாவில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது வழக்கமாகி உள்ளது.
தமிழக மீனவர்கள் கைது செய்ய ப்படும் சம்பவங்கள் தொடர்ந்து வரும் நிலையில் இருநாட்டினரும் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த நிலையில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை ஒரு விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளது.
இதையும் படிங்க: கொரோனாவில் உயிரை பணயம் வைத்த தேவதைகள்... இப்படி ACCUST மாறி நடத்துறீங்க? கொந்தளித்த அதிமுக
மீனவர்களின் தொடர் கைது நடவடிக்கை தொடர்பாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தற்போது வரை 62 மீனவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கும் சூழ்நிலையில் 248 படகுகள் இலங்கை வசம் இருப்பதாகவும் மீனவர்களை விடுவிக்க பேச்சுவார்த்தை நடத்துவதோடு படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது கடிதத்தின் வாயிலாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: உழவர் நலன் காக்கும் சாதனைகள் தொடரும்... முதல்வர் ஸ்டாலின் உறுதி