என் மனைவியை அசிம் முனீர்.. போருக்கும் இவரே காரணம்.. இம்ரான் கான் பகீர் குற்றச்சாட்டு!!
பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் மீது அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
காஷ்மீரில் கடந்த 22 ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். இதை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டன. இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வந்தது. இந்த சூழலில் இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து சண்டை நிறுத்தம் ஏற்பட்டது. இதனிடையே ராணுவத் தளபதி ஜெனரல் ஆசிம் முனீர் மீது பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சில கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இதுக்குறித்த அவரது எக்ஸ் தள பதிவில், நான் பிரதமராக இருந்தபோது ஜெனரல் ஆசிம் முனீரை ஐஎஸ்ஐ இயக்குநர் ஜெனரல் பதவியில் இருந்து நீக்கினேன்.
இதையும் படிங்க: இந்தியாவுடன் போர்: பாகிஸ்தான் அரசுக்கு இம்ரான் கான் சவுக்கடி..! புறக்கணிக்கும் பி.டி.ஐ..!
அப்போது அவர், இதுகுறித்து பேச எனது மனைவி புஷ்ரா பிபியிடம் போனார். ஆனால் புஷ்ரா பிபி பேச மறுத்துவிட்டார். இதுபோன்ற விஷயங்களில் தனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்றும் நேரில் சந்திக்க முடியாது என்றும் மறுத்துவிட்டார். இதற்குப் பழிவாங்கவே எனது மனைவி புஷ்ரா பிபியை 14 மாதங்கள் சிறையில் தள்ளினார் ஜெனரல் ஆசிம் முனீர். இதுதான் அவரது பழிவாங்கும் நடவடிக்கை. இதுவரை யாரும் இதுபோல எனது மனைவியை அரசியல் காரணங்களுக்காக பழிவாங்கியது இல்லை.
பாகிஸ்தானின் சர்வாதிகார ஆட்சிக் காலங்களில்கூட இதுபோன்ற சம்பவம் நடந்ததில்லை. எந்த ஆதாரமும் இல்லாமல் பொய்யான வழக்குகளில் எனது மனைவி கைது செய்யப்பட்டார். அரசியலில் கூட ஈடுபடாத சாதாரண பெண் அவர். சிறையில் அடைத்தது மட்டுமின்றி சுமார் 4 வாரங்கள் என்னைக் கூட சந்திக்க அனுமதிக்கவில்லை. விதிமுறைகளின்படி ஜூன் 1ம் தேதி நான் அவரை சந்திக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் நீதிமன்ற உத்தரவை மீறி என்னை அனுமதிக்க மறுத்துவிட்டனர் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு இந்தியா இறுதி எச்சரிக்கை..! பதற்றத்தில் ஷாபாஸ் ஷெரீஃப் அசிம் முனீர்..!