×
 

தருண் தேஜ்பாலுக்கு 10 ஆண்டு சிறை: பாலியல் வன்கொடுமை வழக்கில் மும்பை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு!!

கோவா காவல்துறை வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தது.

தெஹல்கா இதழின் முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால் மீதான 2013 ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் மும்பை உயர்நீதிமன்றத்தின் கோவா அமர்வு இன்று அதிரடி தீர்ப்பளித்துள்ளது. கீழமை நீதிமன்றத்தின் விடுதலை உத்தரவை ரத்து செய்த நீதிபதிகள் நீலா கோகலே மற்றும் அமித் ஜாம்சண்டேகர் அடங்கிய அமர்வு, அவரை குற்றவாளி என அறிவித்து 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்துள்ளது.

இந்த வழக்கு, 2013 நவம்பரில் கோவாவில் நடைபெற்ற தெஹல்காவின் ThinkFest நிகழ்வின் போது ஒரு நட்சத்திர ஹோட்டலின் லிஃப்ட்டில் நடந்ததாகக் கூறப்படும் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. அப்போது தனது இளம் பெண் சக பத்திரிகையாளரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக தேஜ்பால் மீது குற்றச்சாட்டு எழுந்தது. கோவா காவல்துறை வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தது. 

2021 மே மாதம் மாபூசா கீழ்நீதிமன்றம் போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி அவரை விடுவித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து கோவா அரசு மேல்முறையீடு செய்தது. விசாரணையில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தை கீழ்நீதிமன்றம் தவறாகக் கையாண்டதாகவும், பாதிக்கப்பட்டவர் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்ற தவறான அனுமானங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டதாகவும் வாதிட்டார். 

இதையும் படிங்க: ரூ.1 லட்சம் ரொக்க பரிசு! முதலமைச்சர் கோப்பை 2026 போட்டிகளுக்கு ஆன்லைன் பதிவு தொடக்கம்!

உயர்நீதிமன்றம் இந்த வாதங்களை ஏற்று, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 376(2)(f), 376(2)(k) (அதிகார நிலையில் இருப்பவர் செய்த பாலியல் வன்கொடுமை), 354A (பாலியல் துன்புறுத்தல்) மற்றும் 354B (உடைகளைக் கழற்றும் நோக்கத்துடன் தாக்குதல்) ஆகியவற்றின் கீழ் தேஜ்பாலை குற்றவாளி என அறிவித்தது. தண்டனை விவரங்களின்படி, முக்கிய பிரிவின் கீழ் 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை மற்றும் லட்சக்கணக்கான ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பிற பிரிவுகளின் கீழ் ஒன்று முதல் மூன்று ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்பட்டாலும், அவை ஒரே நேரத்தில் நடைமுறைப்படுத்தப்படும். அபராதத் தொகை பாதிக்கப்பட்டவருக்கு வழங்கப்படும். 

தேஜ்பால் சரணடைவதற்கு இரண்டு முதல் நான்கு வார கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தண்டனை விசாரணையின்போது 62 வயதான தேஜ்பால், தனக்கு மனைவி மற்றும் மகள்கள் இருப்பதாகவும், தானே பாதிக்கப்பட்டவர் எனவும் கூறி கருணை கோரினார். நீதிமன்றம் குற்ற உணர்வு இல்லாததை சுட்டிக்காட்டியது. இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக தேஜ்பால் தரப்பு தெரிவித்துள்ளது. 13 ஆண்டுகளுக்குப் பிறகு வந்த இந்த தீர்ப்பு, நீதிமன்ற நடைமுறைகளில் பாதிக்கப்பட்டவரின் சாட்சியத்தின் முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: "கோட் சூட் விவசாயி முதல்வரே"..! கத்தி பட டயலாக்கோடு வானதி சீனிவாசன் தாக்கு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share