இதுவரை கொடுத்ததுலேயே இதுதான் மரண அடி! பாகிஸ்தானுக்கு எதிராக பிரான்சில் இந்திய எம்.பிக்கள் குழு சூளுரை..
பாகிஸ்தானின் எல்லைமீறிய அத்துமீறல் கண்டிக்கத்தக்கது. இதுவரை நடந்த நான்கு நேரடி சண்டையிலும், இந்தியா எதிர்வினை ஆற்றியது. இம்முறை பஹல்காம் தாக்குதலுக்கு மிகப் பெரிய அடியை இந்திய அளித்தது என ரவி சங்கர் பிரசாத் எம்.பி கூறினார்.
காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ல் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமை இடமாக கொண்டு செயல்படும் லக்ஷர் இ தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் (The Resistance Front - TRF) என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா அழித்தது. இதனை அடுத்து ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மூலம் இந்திய விமானப் படை, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசி அழித்தது.
பஹல்காம் பயங்கரவாத தாக்கதலை அடுத்து, இந்தியாவின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கை குறித்து விளக்குவதற்காக, நம் நாட்டின் அனைத்து கட்சி எம்பிக்கள் குழு வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. பாஜ எம்பி ரவிசங்கர் பிரசாத் தலைமையிலான குழுவினர், பிரான்ஸ் நாட்டிற்கு சென்றுள்ளனர். பிரான்ஸ் தலைநகர் பாரிசில், அந்நாட்டில் வசிக்கும் இந்தியர்கள், நிபுணர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரை சந்தித்த எம்பிக்கள் குழு, அவர்களிடம் பஹல்காம் தாக்குதல் சம்பவம் குறித்து விளக்கினர்.
இதையும் படிங்க: என் ரத்தம் கொதிக்குது..! கனவுல கூட நினைச்சிருக்க மாட்டாங்க.. குஜராத்தில் மோடி ஆவேசம்..!
அப்பாவி சுற்றுலா பயணிகள் பயங்கரவாத தாக்குதலில் பலியானதும், அதற்கு பாகிஸ்தான் ராணுவம் துணை நின்றதையும் விளக்கினர். அதைத் தொடர்ந்து பயங்கரவாதத்திற்கு எதிராக இந்திய முப்படைகள் நடத்திய ஆபரேஷன் சிந்துார் குறித்தும் விரிவாக விளக்கினர். தொடர்ந்து அந்நாட்டு பத்திரிக்கையாளர்களை சந்தித்து, பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்கினர். இன்று பிரான்ஸ் எம்பிக்கள் மற்றும் அரசியல் தலைவர்களை சந்தித்து பேசவுள்ளனர்.
இது குறித்து, இந்திய எம்பிக்கள் குழு தலைவர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது: இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் எல்லைமீறிய அத்துமீறல் கண்டிக்கத்தக்கது. இதுவரை நடந்த நான்கு நேரடி சண்டையிலும், இந்தியா எதிர்வினை ஆற்றியது. இம்முறை பஹல்காம் தாக்குதலுக்கு மிகப் பெரிய அடியை இந்திய அளித்தது.
பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் புகழிடமாக திகழ்கிறது. ஐநா பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்டுள்ள பட்டியலில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் பாகிஸ்தானில் செயல்படுகின்றன. அந்நாட்டு அரசும், ராணுவமும் பயங்கரவாதிகளை ஆதரிக்கின்றனர். ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கையில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் உடலுக்கு, அந்நாட்டு ராணுவம், அரசு அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். அவர்களுக்கு அரசு மரியாதை வழங்கப்பட்டது.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் உடனடியாக நிறுத்த வேண்டும். பயங்கரவாத ஆதரவு செயல்களுக்கு அவர்கள் பதில் சொல்லி ஆக வேண்டும். இம்முறை இந்தியாவின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் தான் அமைதி பேச்சுக்கு பாகிஸ்தான் முன் வந்துள்ளது. ஆபரேஷன் சிந்துார் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எங்கள் மண், மக்கள் மீதான தாக்குதலை பொறுத்துக்கொள்ள முடியாது.
எந்த வகையிலும் பயங்கரவாதத்தை ஏற்க முடியாது. இந்தியா அதற்கு தக்க பதில் அடி தரும். பயங்கரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒருங்கிணைய வேண்டும். உலக நாடுகளின் குரல் பயங்கரவாதத்திற்கு எதிராக ஓங்கி ஒலிக்க வேண்டும் என அவர் கூறினார்.
இதையும் படிங்க: இந்தியாவுக்கு எதிராக சதித்திட்டம்.? இஸ்தான்புல்லில் துருக்கி அதிபர் - பாக்., பிரதமர் திடீர் சந்திப்பு..!