×
 

கதற கதற கூட்டு பாலியல் வன்கொடுமை! முழுமையான விசாரணைக்கு அதிரடி உத்தரவு...

ஒடிசாவில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் முழுமையான விசாரணைக்கு துணை முதலமைச்சர் உத்தரவிட்டார்.

ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள கோபால்பூர் கடற்கரையில் 20 வயது மாணவி தனது ஆண் நண்பருடன் பேசிக்கொண்டு இருந்துள்ளார். இரவு 9 மணி அளவில் அங்கு சென்ற கும்பல் ஒன்று அந்தப் பெண்ணின் ஆண் நண்பரை கட்டிவிட்டு, அருகில் உள்ள கைவிடப்பட்ட வீட்டிற்கு அந்த பெண்ணை இழுத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். 

இந்த சம்பவம் தொடர்பாக அந்தப் பெண்ணின் ஆண் நண்பர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக பத்து பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ள நிலையில் சுற்றுலா தளங்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதையும் படிங்க: வாயில் மண்ணை கொட்டி.. 80 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்.. ஒருவரை சுட்டுப்பிடித்த போலீஸ்..!

இந்த நிலையில், இந்த கூட்டு பாலியல் வன்கொடுமை தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று ஒடிசாக்கடை முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். போலீசார் தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களிடம் விரிவான விசாரணையை மேற்கொண்டு வருகின்றன. மாநில அரசு குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை உறுதி செய்யப்படும் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: எச்சரித்த நீதிபதி! கண்ட்ரோலுக்கு வந்த MLA.. திருவாலங்காடு காவல் நிலையத்தில் ஜெகன் மூர்த்தி ஆஜர்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share