#BREAKING: குஜராத்தில் பயணிகள் விமானம் நொறுங்கிய கோரச் சம்பவம்...242 பேரின் கதி என்ன?
குஜராத் மாநிலத்தில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கி உள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையம் அருகே இந்த விமானம் விபத்துக்குள்ளானது. மேகனி நகரில் விபத்து ஏற்பட்ட நிலையில் கரும்புகை வெளியேறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், விமானத்தில் இருந்தவர்கள் நிலை குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ம் என்று முதற்கட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானம் டேக் ஆஃப் ஆனபோது விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 7 தீயணைப்பு வாகனங்கள் மீட்பப் பணியில் ஈடுபட்டுள்ளன. குஜராத்தில் இருந்து நேரடியாக லண்டன் புறப்பட்ட விமானம் நொறுங்கி உள்ளது. விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் இருந்து மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். ஏர் இந்தியா நிறுவனத்தின் எஐ 171 விமானம் விபத்தில் சிக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கிய நிலையில் அருகில் இருப்பவர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
அருகிலுள்ள சாலைகள் அனைத்தும் அடைக்கப்பட்ட மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் 242 பேர் இருந்ததாக கூறப்படும் நிலையில் அவர்களின் நிலை என்ன என்பது குறித்து இதுவரை தெரிவிக்கப்படவில்லை.மேலும் விபத்துக்குள்ளான விமானம் தொடர்பாகவும் எந்த விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.