ஆபாச வீடியோ... பாலியல் தொல்லை... அச்சத்தில் மாணவிகள்... ஆசிரியர் மீது பாய்ந்த போக்சோ...!
மதுரையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் என்பது உலகெங்கிலும் நிலவும் ஒரு மிகப்பெரிய சமூகப் பிரச்சினை. இது பெண்களின் உரிமைகள், பாதுகாப்பு, மற்றும் மனித மாண்பை மீறும் ஒரு கடுமையான குற்றம். இந்தியாவிலும், உலகின் பல பகுதிகளிலும், பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன, இது சமூகத்தில் ஆழமான வேர் ஊன்றியுள்ள பாலின சமத்துவமின்மை, ஆணாதிக்க மனோபாவம், மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறையை பிரதிபலிக்கிறது.
இது பொது இடங்களில், பணியிடங்களில், கல்வி நிறுவனங்களில், வீடுகளில், மற்றும் ஆன்லைன் தளங்களில் கூட நிகழ்கிறது. குறிப்பாக பள்ளி மாணவிகளுக்கு எதிராக நிகழும் பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. மேலும் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கூட பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. வயது வித்தியாசம் இல்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாலியல் தொல்லை பெரும் சமூக பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
இந்த நிலையில், மதுரையில் பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பாலியல் புகார் கொடுத்தும் பள்ளியில் நடவடிக்கை எடுக்காததால் அதிருப்தி அடைந்த மாணவிகள் காவல் ஆணையரகத்தில் நேரடியாக சென்று புகார் கொடுத்துள்ளனர். மதுரை சுப்பிரமணியபுரத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளுக்கு ஆபாசமாக பேசியும் ஆபாச வீடியோ காண்பித்தும் தொல்லை அளித்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பாய்ந்தது போக்சோ... சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இந்து மகாசபா தலைவர் அதிரடி கைது...!
பாலியல் தொல்லை குறித்து புகார் அளித்தும் பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத நிலையில் மதுரை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு சென்று மாணவிகள் புகார் அளித்துள்ளனர். இதன் பேரில் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர், தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர் ஆகியோர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் பள்ளியை வாடகைக்கு விட்டு விடுவதாகவும் மாணவிகள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.
இதையும் படிங்க: குற்றங்களை தடுக்காமல் பண்பட்ட சமூகம்- னு சொல்ல முடியாது... கோவை மாணவிக்கு குரல் கொடுத்த கனிமொழி எம்.பி...!