×
 

எந்த மொழிக்கும் இந்தி எதிரி இல்லை.! நண்பன் தான்.!! தாய்மொழி குறித்து அமித்ஷா வைத்த ட்விஸ்ட்..!

இந்தி எந்த இந்திய மொழிக்கும் எதிரியாக இருக்க முடியாது என்று நான் மனதார நம்புகிறேன். இந்தி அனைத்து இந்திய மொழிகளுக்கும் நண்பன் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

நாட்டின் தலைநகரம் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அலுவல் மொழித்துறையின் பொன்விழா கொண்டாட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு உரையாற்றினார். மொழி என்பது வெறும் தொடர்புக்கான கருவி மட்டும் அல்ல. அது தேசத்தின் உயிர் நாடி. மொழிகளை போற்றி பாதுகாப்பதின் மூலம், நாட்டின் கலாசாரம், பாரம்பரியத்தை முன்னெடுக்கலாம். 

நாம் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல. எந்த ஒரு வெளிநாட்டு மொழியையும் வெறுக்க வேண்டிய அவசியமும் இல்லை. ஆனால், நம் சொந்த மொழி மீதான விருப்பம் கவுரவத்தையும் மறக்கக் கூடாது. அனைத்து மாநில அரசுகளும் தாய் மொழி கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பொறியியல், மருத்துவ படிப்புகளை மாநில மொழிகளில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நம் நாட்டில் 11 செம்மொழிகள் இருப்பதுபோல், வேறெந்த நாட்டிலும் இருப்பதாக தெரியவில்லை. இந்தி மொழி எந்த ஒரு இந்திய மொழிக்கும் எதிரி அல்ல. அது அனைத்து இந்திய மொழிகளின் தோழி. நண்பன். அனைத்து இந்திய மொழிகளையும் நேசிப்போம்; பாதுகாப்போம் என அமித் ஷா பேசினார்.  

இதையும் படிங்க: ஆங்கிலம் அவமானம் அல்ல.. அமித் ஷா பேச்சுக்கு ராகுல்காந்தி THUG கமெண்ட்..!

நாம் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல. எந்த வெளிநாட்டு மொழியையும் எதிர்க்க வேண்டிய அவசியம் இல்லை.  ஆனால் நம் சொந்த மொழியை பெருமைப்படுத்த வேண்டும். சொந்த மொழியில் பேச வேண்டும், சிந்திக்க வேண்டும். இந்தி எந்த ஒரு இந்திய மொழிக்கும் எதிரி அல்ல. அது அனைத்து இந்திய மொழிகளின் தோழி. நண்பன். இந்தியும், பிற இந்திய மொழிகளும் சேர்ந்து தான் நமது பெருமை மற்றும் தன்னிறைவுக்கான லட்சியத்தை அடைய வழி வகுக்கும்.

நம் நாட்டில் 22 அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் அலுவல் மொழிகளாக உள்ளன. அந்த மொழிகளின் வளர்ச்சிக்கும், அதை பாதுகாத்து அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்லவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளை சிறப்பிக்க காசி தமிழ் சங்கம், சவுராஷ்டிரா தமிழ் சங்கமம், காசி தெலுங்கு சங்கமம் போன்ற பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. 

அனைத்து மாநில அரசுகளும் தாய் மொழி கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தாய் மொழியில் பேசுவதின் மூலம், சிந்திப்பதின் மூலம், நம் அடிமை எண்ணம் விலகும். சுதந்திரமான பல கருத்துக்கள் தோன்றும். மத்திய பிரதேசத்தில் மருத்துவ படிப்புகள் ஹிந்தியில் வழங்கப்படுகின்றன.

அனைத்து மாநிலங்களிலும் இந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளை அந்தந்த மாநில மொழிகளில் வழங்கப்பட வேண்டும். அதற்கான முன்னெடுப்புகளை மாநில அரசுகள் செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். 

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் மராட்டி, பாலி, பிராகிருதம், அசாமி, பெங்காலி ஆகிய மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்த்து வழங்கப்பட்டது. அந்த வகையில் நம் நாட்டில் சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு,  கன்னடம், மலையாளம், ஒடியா, மராட்டி, பாலி, பிராகிருதம், அசாமி, பெங்காலி ஆகிய 11  செம்மொழிகள் உள்ளன. உலகின் வேறெந்த நாட்டிலும் 11 செம்மொழிகள் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. இது நம் நாட்டின் மிகப் பெரிய பலம் மற்றும் பெருமை என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

ஜே.இ.இ, நீட், மத்திய பல்கலை மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு போன்ற  தேர்வுகளை 13 மொழிகளில் எழுதுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிஏபிஎப் படையில் கான்ஸ்டபிள் பணியில் சேர விரும்புவோர் அதற்கான தேர்வை 13 மொழிகளில் எழுத நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன் மூலம், இன்று கான்ஸ்டபிள் பணிக்கான போட்டித் தேர்வெழுதும் 95 சவீதம் பேர் அவர்களின் தாய் மொழியிலேயே தேர்வு எழுத வாய்ப்பு கிடைத்துள்ளது.  அனைத்து மொழிகளையும் நேசிப்போம். தாய் மாெழியில் சிந்திப்போம். இந்திய மொழிகளை போற்றுவோம், பாதுகாப்போம் என அமித் ஷா பேசினார்.  

இதையும் படிங்க: பயங்கரவாதிகளை அழ வைத்தவர் மோடி! ரவுடிகளை ஒழித்தவர் யோகி! அமித் ஷா சூட்டும் புகழாரம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share