துருக்கிக்கு ஆப்பு வைத்த மோடி.. சைப்ரஸ் பயணம் மூலம் பலத்தை அதிகரித்த இந்தியா!!
துருக்கி பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டும் நிலையில், துருக்கிக்கு எதிராக நிற்கும் சைப்ரஸ் இந்தியாவுடன் கைகோர்த்துள்ளது. ஏற்கனவே பொருளாதார ரீதியாக துருக்கிக்கு நெருக்கடி கொடுத்த இந்தியா, இப்போது அதன் அண்டை நாடுகள் மூலமும் செக் வைக்க தொடங்கி உள்ளது.
சைப்ரஸ், கனடா, குரோஷியா நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டுள்ளார். முதலில் சைப்ரஸ்க்கு சென்ற அவர், வர்த்தக மாநாட்டில் கலந்து கொண்டார். பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதான மாக்காரியோஸ் 3 கிராண்ட் கிராஸ் விருது வழங்கப்பட்டது. சைப்ரஸ் அதிபர் நிகோஸ் கிறிஸ்டோவுக்கு, காஷ்மீரில் கைகளால் செய்யப்பட்ட பட்டு கம்பளத்தை பிரதமர் மோடி பரிசாக வழங்கினார்.
மிக நுணுக்கமான வேலைப்பாடுகள் நிறைந்த இந்த கம்பளம், காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள கைவினைஞர்களால் நெய்யப்பட்டவை. பாரம்பரியமான சிறப்பு நிறத்தில் உருவாக்கப்பட்டவை. சைப்ரஸ் அதிபரின் மனைவி பிலிப்பா கர்சேராவுக்கு வெளியிலான கைப்பையை பிரதமர் மோடி பரிசளித்தார். இது, ஆந்திராவில் தயாரிக்கப்பட்ட பாரம்பரிய உலோக வேலைப்பாடுகளை கொண்டவை. மலர் டிசைன்கள், கைப்பிடியுடன் ஆடம்பர தோற்றத்துடன் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கைப்பையின் மையத்தில், விலை உயர்ந்த கல் பதிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: துருக்கியை துண்டாட மோடி போட்ட ஸ்கெட்ச்.. சைப்ரஸ் பயணத்தின் பின்னணியில் உள்ள ராஜதந்திரம்..!
இந்த 2 பொருட்களும், இந்தியாவின் கைவினை திறனுக்கு சான்றாக இருப்பவை. இதற்கிடையே சர்வதேச அளவில் போர் பதற்றம் நிலவும் நிலையில் பிரதமர் மோடியின் சைப்ரஸ் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் ஐ.நா சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக இணைக்க ஆதரவு அளிக்கும் நாடுகளில் ஒன்று சைப்ரஸ்.
இந்தியாவின் நட்பு நாடாக உள்ளது. அதே நேரத்தில் சைப்ரஸ் அருகே உள்ள துருக்கி பாகிஸ்தான் பக்கம் நிற்கிறது. இந்தியா-பாகிஸ்தான் பதற்றத்தின் போது பாகிஸ்தானுக்கு நேரடியாக உதவிய நாடு துருக்கி. பாகிஸ்தான் இந்தியா மீது ஏவிய பெரும்பாலான ட்ரோன்கள் துருக்கியில் தயாரிக்கப்பட்டவை. இப்படி பல வழிகளில் பாகிஸ்தானுக்கு உதவிய துருக்கியை ராஜாங்க ரீதியாக எதிர்கொள்ள இந்தியா தயாராகிவிட்டது.
இதன்முதல் படி தான் பிரதமர் மோடியின் சைப்ரஸ் பயணம். கடைசியாக 2002ல் அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது சைப்ரஸ் நாட்டிற்கு சென்றிருந்தார். 23 ஆண்டுகளில் முதல் முறையாக சைப்ரஸ் செல்லும் பிரதமர் என்கிற பெருமையை பிரதமர் மோடி பெற்றுள்ளார். இந்த பயணத்தில் இரு நாடுகளுக்கும் இடையில் பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
இந்தியா - சைப்ரஸ் - கிரீஸ் நாடுகளின் கூட்டமைப்பு, இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பியா பொருளாதார வழித்தடம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. ஆபரேஷன் சிந்தூரின் போது இந்தியா எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் விளக்கப்பட்டது. பேச்சுவார்த்தையின் முடிவில் இந்தியாவுக்கு முழு ஆதரவு அளிக்கிறோம் என சைப்ரஸ் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.
ஏற்கனவே சைப்ரஸ் நாட்டுக்கும் துருக்கிக்கும் ஆகாது. 1974ல் துருக்கி சைப்ரஸை ஆக்கிரமித்து அதன் வடக்கு பகுதியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. ஒரு வழியாக சைப்ரஸ் ராணுவம் அதனை போராடி மீட்டது. இப்போது துருக்கி பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டும் நிலையில், துருக்கிக்கு எதிராக நிற்கும் சைப்ரஸ் இந்தியாவுடன் கைகோர்த்துள்ளது.
ஏற்கனவே பொருளாதார ரீதியாக துருக்கிக்கு நெருக்கடி கொடுத்த இந்தியா, இப்போது அதன் அண்டை நாடுகள் மூலமும் செக் வைக்க தொடங்கி உள்ளது. இது பாகிஸ்தான் ஆதரவு நிலைபாட்டை எடுத்த துருக்கிக்கு பேரிடியாக அமைந்துள்ளது
இதையும் படிங்க: இந்தியா -பாக்., போல ஈரான் - இஸ்ரேல் போரை நிறுத்துவேன்.. ஆட்டத்தை ஆரம்பிக்கும் ட்ரம்ப்..!