ஆபரேசன் சிந்தூர் 2.0க்கு தயாராகும் இந்தியா! அடுத்தக்கட்ட போருக்கு ரெடி! ராணுவ தளபதி உபேந்திர திவேதி அதிரடி!
ஆபரேஷன் சிந்தூர் 2.0க்கும், அடுத்த கட்ட போருக்கும் முப்படைகள் தயாராகி வருகிறது என ராணுவ தளபதி உபேந்திர திவேதி தெரிவித்துள்ளார்.
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த 2025 ஏப்ரல் மாதம் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் 26 பேர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட கொடூர சம்பவம் இந்தியாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதற்கு உரிய பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் வெற்றிகரமான ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது. உலக அரங்கில் பெரும் கவனத்தை ஈர்த்த இந்த நடவடிக்கை, பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் உறுதியான அணுகுமுறையை உலகுக்கு உணர்த்தியது.
இந்நிலையில், தற்போது ஆபரேஷன் சிந்தூர் 2.0 உள்ளிட்ட அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு இந்திய முப்படைகளும் தயாராகி வருவதாக ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டால்..!! புவியியல் வரலாற்றில் பாக்., இருக்கவே இருக்காது! ராணுவ தளபதி வார்னிங்!
ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் பேசியதாவது: “ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது. போர் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. தேவை ஏற்பட்டால் புதிய நடவடிக்கைக்கு தரைப்படை, விமானப்படை மற்றும் கடற்படை ஆகிய மூன்றும் முழு தயார்நிலையில் உள்ளன. ஆபரேஷன் சிந்தூர் 2.0க்கும், அடுத்த கட்ட போருக்கும் முப்படைகள் தயாராகி வருகின்றன” என்றார்.
மேலும், முப்படைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதிலும், 24 மணி நேரமும் போர் தயார்நிலையில் இருப்பதிலும் தங்களது கவனம் செலுத்துவதாக அவர் கூறினார். “போர்க்களம் இன்று மிகவும் வெளிப்படையானதாக மாறியுள்ளது. ஒவ்வொரு அசைவும் எதிரியுக்கு தெரிய வரும் நிலை உள்ளது. எனவே, நமது வீரர்கள் மற்றும் எல்லைப் பகுதி மக்களைப் பாதுகாக்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மிகுந்த எச்சரிக்கையுடன் செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
ஒரு தேசம் முழுவதும் ஒன்றுபட்டு நின்று போரில் இறங்கினால் வெற்றி உறுதி என உபேந்திர திவேதி உறுதியளித்தார். இந்தியாவின் பாதுகாப்பு அமைப்புகள் இடையேயான ஒருங்கிணைப்பு மேம்படுத்தப்படுவது எதிர்காலப் போர்களில் முக்கிய பங்கு வகிக்கும் என்ற நம்பிக்கையும் அவரது பேட்டியில் வெளிப்பட்டது.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா காட்டிய வலிமை உலக நாடுகளுக்கு பெரும் செய்தியாக அமைந்தது. தற்போது முப்படைகளின் தயார்நிலை குறித்த ராணுவத் தளபதியின் அறிவிப்பு, பயங்கரவாத சக்திகளுக்கு எதிரான இந்தியாவின் அசைக்க முடியாத உறுதியை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது. எல்லைப் பாதுகாப்பு மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பில் இந்தியா எப்போதும் உஷாராக இருக்கும் என்பதை இது நினைவூட்டுகிறது.
இந்திய மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு நின்றால் எந்த சவாலையும் சமாளிக்க முடியும் என்பதே ராணுவத் தளபதியின் செய்தியின் சாராம்சமாகும்.
இதையும் படிங்க: இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டால்..!! புவியியல் வரலாற்றில் பாக்., இருக்கவே இருக்காது! ராணுவ தளபதி வார்னிங்!