×
 

இந்தியாவில் விரைவில் ஸ்டார்லிங் இன்டர்நெட் சேவை... எலான் மஸ்க்-க்கு அனுமதி அளித்தது மத்திய அரசு!!

இந்தியாவில் இண்டர்நெட் சேவையை வழங்க எலான் மஸ்க்கின் ‛ஸ்டார்லிங்' நிறுவனத்துக்கு மத்திய தொலைத்தொடர்புத்துறை உரிமம் கொடுத்துள்ளது.

உலக பணக்காரர்களின் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் எலான் மஸ்க், சமீபத்தில் எக்ஸ் வலைதளத்தை வாங்கினார். இதுதவிர ‛ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தின் துணை நிறுவனம் ஸ்டார்லிங்கையும் நடத்தி வருகிறது. செயற்கைகோள் மூலம் இண்டர்நெட் சேவையை வழங்கும் பணியை ஸ்டார்லிங் மேற்கொண்டு வருகிறது.  அனைத்து இடங்களிலும் இந்த சேவையை தங்கு, தடையின்றி செயற்கைகோள் வழியாக இண்டர்நெட் வழங்குகிறது.

எலான் மஸ்க்கின் நிறுவனமான ஸ்டார்லிங்' இண்டர்நெட்டை சேவையை நம் நாட்டிலும் துவங்க 2 ஆண்டுக்கு முன்பு அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் உள் நாட்டு பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொண்டு மத்திய அரசு உடனடியாக அனுமதி கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. அனுமதி தாமதிக்கப்பட்டு வந்த நிலையில் 2 ஆண்டு காத்திருந்த ஸ்டார்லிங் நிறுவனத்துக்கு இப்போது அனுமதி கிடைத்துள்ளது.

இதையும் படிங்க: முடங்கியது எக்ஸ் வலைதளம்... வாய்திறக்காமல் மௌனம் காத்த நிறுவனம்; என்ன செய்கிறார் எலான் மஸ்க்?

செயற்கைகோள் மூலம் இண்டெர்நெட் சேவையை தொடங்குவதற்கான ‛சேட்டிலை கம்யூனிகேஷன்' என்ற உரிமத்தை மத்திய தொலைத்தொடர்புத்துறை வழங்கி உள்ளது. இந்த உரிமத்தை இதுவரை 2 நிறுவனங்களுக்கு மட்டுமே இந்தியா வழங்கி இருக்கிறது. Eutelsat's one Web மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய நிறுவனங்களுக்கு பிறகு எலான் மஸ்கின் ‛ஸ்டார்லிங்' நிறுவனத்துக்கு தான் இந்த லைசன்ஸ் கிடைத்துள்ளது.

எனவே ‛ஸ்டார்லிங்' தனது இன்டர்நெட் சேவையை இந்தியாவிலும் விரைவில் தொடங்க உள்ளது. இதற்கான சோதனை இன்னும் 15 முதல் 20 நாட்களில் நடைபெற உள்ளது. இதற்கான ஸ்பெக்ட்ரம் விரைவில் ‛ஸ்டார்லிங்' நிறுவனத்துக்கு வழங்கப்பட உள்ளது. இந்த சோதனையை தொடர்ந்து அடுத்தக்கட்டமாக ‛ஸ்டார்லிங்' நிறுவனத்தின் செயற்கைகோள் இண்டர்நெட் சேவை மக்கள் பயன்பாட்டுக்கு வரும். இது ஸ்டார்லிங் நிறுவனத்துக்கும் இந்தியாவுக்கும் முக்கிய மைல் கல்லாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா.. எகிறும் எண்ணிக்கை.. மீண்டும் லாக்டவுன்..?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share