×
 

ஆப்ரேஷன் அமிஸ்தாத் திட்டம்! நிலநடுக்கத்தால் உருக்குலைந்த வெனிசுலாவுக்கு இந்தியா ஆதரவுக்கரம்!

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள வெனிசுலாவுக்கு உதவும் வகையில், 'ஆப்ரேஷன் அமிஸ்தாத்' திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.

புதுடெல்லி: பயங்கர நிலநடுக்கத்தால் பெரும் பாதிப்புக்கு உள்ளான வெனிசுலாவுக்கு உதவும் வகையில் இந்தியா ‘ஆப்ரேஷன் அமிஸ்தாத்’ என்ற நிவாரணத் திட்டத்தை தொடங்கியுள்ளது. இதன் கீழ் இந்திய விமானப் படையின் இரண்டு சி-17 ரக விமானங்கள் 35 டன்னுக்கும் மேற்பட்ட நிவாரணப் பொருட்கள் மற்றும் மருத்துவக் குழுவுடன் வெனிசுலா நோக்கி புறப்பட்டுள்ளன.

கடந்த 24-ஆம் தேதி வெனிசுலாவில் 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான இரு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. தலைநகர் கராகஸ் உள்ளிட்ட பகுதிகள் பெரிதும் சேதமடைந்தன. இதில் 920 பேர் உயிரிழந்ததாகவும், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ள நிலையில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

பிரதமர் நரேந்திர மோடி, பாதிக்கப்பட்ட வெனிசுலா மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என ஏற்கெனவே உறுதியளித்திருந்தார். இதை நிறைவேற்றும் விதமாக வெளியுறவு அமைச்சகம் ‘ஆப்ரேஷன் அமிஸ்தாத்’ திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. ஸ்பானிஷ் மொழியில் ‘அமிஸ்தாத்’ என்றால் ‘நட்பு’ என்று பொருள். இந்தப் பெயரே இந்தியாவின் நல்லெண்ணத்தை பிரதிபலிக்கிறது.

இதையும் படிங்க: அடுத்தடுத்து நிலநடுக்கம்! ஆடிப்போன வெனிசுலா! சுனாமி வார்னிங்! ஆதரவுக் கரம் நீட்ட இந்தியா தயார்! மோடி அறிவிப்பு!

உத்தரப் பிரதேச மாநிலம் காஜியாபாத் ஹிண்டன் விமானப்படைத் தளத்தில் இருந்து நேற்று புறப்பட்ட விமானங்களில் 41 பேர் கொண்ட மருத்துவக் குழு இடம்பெற்றுள்ளது.

இதில் ராணுவத்தைச் சேர்ந்த ஒன்பது மருத்துவ அதிகாரிகளும் அடங்குவர். 35 டன்னுக்கு மேற்பட்ட நிவாரணப் பொருட்கள், மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இந்த உதவி வெனிசுலாவின் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு பெரும் பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் வெளியிட்ட அறிக்கையில், “நெருக்கடியான இந்த நேரத்தில் வெனிசுலா அரசுக்கும், அங்குள்ள மக்களுக்கும் இந்தியா உறுதியான ஆதரவுடன் நிற்கிறது” எனத் தெரிவித்தார். 

சிலி, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, கத்தார், பிரேசில், போர்ச்சுகல், கனடா உள்ளிட்ட பல நாடுகளும் வெனிசுலாவுக்கு உதவிக் கரம் நீட்டியுள்ளன. இந்தியாவின் இந்த உடனடி நடவடிக்கை சர்வதேச அரங்கில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

வெனிசுலாவில் தொடர் நிலநடுக்கங்கள் ஏற்படும் அபாயம் உள்ளதால், அங்கு மக்கள் பெரும் பதற்றத்தில் உள்ளனர். இந்தியாவின் நிவாரண உதவி அவர்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: வெனிசுலாவில் மீண்டும் நிலநடுக்கம்! அதிகரிக்கும் உயிரிழப்பு! மீளாத்துயரில் சிக்கி உழலும் மக்கள்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share