#BREAKING: மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்… இந்திய அணி அபார வெற்றி... சுருண்டது பாகிஸ்தான்...!
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
13-வது மகளிர் உலகக் கோப்பை போட்டி செப்டம்பர் 30ஆம் தேதி தொடங்கிய நிலையில் நவம்பர் 2 ஆம் வரை கவுகாத்தி, இந்தூர், விசாகப்பட்டினம், நவிமும்பை மற்றும் இலங்கையின் கொழும்பு ஆகிய நகரங்களில் நடக்க உள்ளது. 12 ஆண்டுக்கு பிறகு இந்தியாவுக்கு உலகக் கோப்பை போட்டி திரும்பியிருக்கிறது.
இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய 8 அணிகள் பங்கேற்று உள்ளன. ஒவ்வொரு அணியும் மற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும் எனவும் லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா, 2022-ல் சாம்பியனாகியும், வரலாற்றில் ஏழு முறை வென்றும், மிக வலுவான அணியாகத் திகழ்கிறது. இந்தியா, தாய்நாட்டில் முதல் கோப்பையை வெல்ல முனைப்பு காட்டி வருகிறது.
இன்று மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் கொழும்புவில் நடக்கும் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் இந்தியா பலப்பரீட்சை நடத்தியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங் தேர்வு செய்தது. இதன் காரணமாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. 50 ஓவர்கள் முடிவில் இந்தியா 247 ரன்கள் குவித்தது. பிறகு 248 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. இறுதியில் பாகிஸ்தான் அணி 159 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையும் படிங்க: #BREAKING: ஆசியக் கோப்பை இறுதிப்போட்டி… இந்திய அணி த்ரில் வெற்றி! ஆட்டம் கண்ட பாகிஸ்தான்...!
இதையும் படிங்க: 7 போரை நிறுத்திருக்கேன்! எனக்கு நோபல் பரிசு கொடுக்கணும்... ஆசையை வெளிப்படுத்திய டிரம்ப்...!