×
 

ஏசி பயன்பாட்டில் முக்கிய மாற்றம் - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு...!

ஏசி பயன்பாட்டில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன என மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் ஏசி-க்களில் குறைந்தபட்ச வெப்பநிலையை 20 டிகிரி செல்சியஸ் அளவுக்கு மாற்ற உள்ளதாக மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.

வீடுகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றில் தற்போது பயன்படுத்தப்படும் ஏசி-க்களில் குறைந்தபட்சமாக 16 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சமாக 30 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் இருக்கும் வரை மாற்றியமைக்கும் வசதி உள்ளது.

ஏசி-க்களில் வெப்பநிலை அளவீட்டை ஒழுங்குபடுத்துவதற்கான குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும், அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும் இருக்கும்.

இதையும் படிங்க: காலையிலேயே பயங்கரம்... கார் மோதி பழனிக்கு பாதயாத்திரை சென்ற 3 பக்தர்கள் துடிதுடித்து பலி..!

20 டிகிரி செல்சியஸுக்குக் குறைவான அளவையோ, 28 டிகிரி செல்சியஸுக்கு அதிகமாகவோ ஏசி-க்களில் அளவை மாற்ற முடியாது.

இது வீடுகள், அலுவலகங்கள் மற்றும் வணிக வளாகங்களில் பயன்படுத்தப்படும் ஏசி-க்களுக்கு மட்டுமன்றி கார்களில் பயன்படுத்தப்படும் ஏசி-க்களுக்கும் பொருந்தும் வகையில் இருக்கும்.

பருவநிலை மாற்றம், அதிகரித்துவரும் வெப்பநிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், மின்சாரத் தேவையைக் கட்டுப்படுத்தும் வகையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அமைச்சர் மனோகர்லால் கட்டார் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ரூ.300 கோடியில் பிரம்மாண்டம்... கோவை மக்களுக்கு அமைச்சர் சொன்ன குட்நியூஸ்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share