×
 

தீவிரவாதம் தொடர்ந்தால் தேடி சென்று அழிப்போம்.. பாகிஸ்தானுக்கு ஜெய்சங்கர் வார்னிங் மெசேஜ்..!

இந்தியா மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினால், அவர்கள் உலகில் எங்கிருந்தாலும் தேடிச் சென்று வேட்டையாடுவோம். அது பாகிஸ்தானாக இருந்தாலும், அங்கும் எங்கள் படை தாக்குதல் நடத்தும் என ஜெய்சங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அரசு முறை பயணமாக ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பாரிசில் பிரான்ஸ் அதிகாரிகளுடன் இரு தரப்பு வர்த்தம், உறவு குறித்து பேச்சு நடத்தினார். பின், செய்தியாளர்களை சந்தித்த ஜெய்சங்கர், அவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார்.

பயங்கரவாதிகளை ஊக்குவித்து, காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான சர்ச்சையாக ஆக்க பாகிஸ்தான் முயல்கிறது. உண்மையில் காஷ்மீர் விவகாரம் இந்தியாவுக்கு, பயங்கரவாதிகளுக்கும் இடையிலானது. 

இந்தியா மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினால், அவர்கள் உலகில் எங்கிருந்தாலும் தேடிச் சென்று வேட்டையாடுவோம். அது பாகிஸ்தானாக இருந்தாலும், அங்கும் எங்கள் படை தாக்குதல் நடத்தும்.

இதையும் படிங்க: அமெரிக்காவில் இந்தியனுக்கு நடந்த கொடுமை.. மாணவனை சித்தரவதை செய்த அடாவடி போலீசார்..!

இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை குறித்த மேற்கத்திய நாடுகளின் கவலை தேவையற்ற ஒன்று. எங்கள் நாட்டில் பல்வேறு மாறுபட்ட கலாசாரம், பண்பாடு, மொழி, உணவுப் பழக்கத்தை பின்பற்றுவோர் வசிக்கின்றனர். எனவே, வேற்றுமையில் ஒற்றுமை என்பதே எங்கள் சிறப்பு, பலம். இந்த விவகாரத்தில் வீண் வதந்திகள் பரப்பப்படுகின்றன.

இன்று வளர்ந்து வரும் நாடுகள் பலவும், ஒரு காலத்தில் காலனி ஆதிக்கத்தின் கீழ் மிகப் பெரும் துயரங்களை அனுபவித்தன. ஆனால், இன்றைய சூழலில் ஒவ்வொரு நாடும் உலக அரங்கில் அதற்கான சரியான இடத்தை பெற நினைக்கிறது. உலக அரங்கில் இந்தியா அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக விளங்குகிறது.

சர்வதேச அரங்கில் இந்தியாவின் செயல்பாடு மிகவும் குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது. 80 ஆண்டுகளாக செயல்படும் ஐநா அமைப்பு பல விஷயங்களில் தடுமாற்றத்தை சந்தித்து வருகிறது. 

இன்றைய சூழலில் ஐநா அமைப்பில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என பல நாடுகள் விரும்புகின்றன. அதில் உலக நாடுகளின் பாதுகாப்புக்காகவும், நன்மைக்காவும் இந்தியா தன் பங்களிப்பை நிறைவேற்ற தயாராக உள்ளது என்றார். அதன் பின் பெல்ஜியம் நாட்டிற்கு சென்ற ஜெய்சங்கர், பிரஸல்சில் வசிக்கும் இந்தியர்கள் இடையே உரையாற்றினார்.

பாகிஸ்தான் பயங்கரவாதிகளை தொடர்ந்து ஆதரிக்கிறது. பயங்கரவாதிகளின் புகழிடமாக அந்நாடு விளங்குகிறது. இந்தியா ஒருபோதும் பயங்கரவாதத்தை ஏற்காது. 

இந்தியா மீது தாக்குதல் நடத்தினால், அவர்களுக்கு சரியான பதிலடி தரப்படும். அந்த வகையில் தான், பஹல்காம் தாக்குதலுக்கு எதிரான ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கை இருந்தது. ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கையின் போது, நம் அதிநவீன போர் விமானங்கள், ஏவுகணைகள் பாகிஸ்தான் விமானப்படை தளங்களை துவம்சம் செய்தன.

மே 10ம் தேதி அவர்களின் 8 விமான ஓடுதளங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன. பாகிஸ்தானால் மேற்கொண்டு ஒன்றுமே செய்ய முடியாத நிலையில் தான், நம்மிடம் போர் நிறுத்தத்திற்கு முறையிட்டனர். அதன் பிறகே சண்டை கைவிடப்பட்டது. 

இந்தியா - பாக்., சண்டை பற்றி நான் சொல்வதை நீங்கள் அப்படியே நம்ப வேண்டிய அவசியம் இல்லை. நான் கூறுவது உண்மை என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. செயற்கைகோள் படங்கள் அவற்றை நிரூபிக்கும். நாம் நடத்திய தாக்குதலுக்கான ஆதாரங்கள் கூகுளில் கொட்டிக்கிடக்கின்றன. பாகிஸ்தான் ஆயிரக்கணக்கான பயங்கரவாதிகளுக்கு தொடர்ந்து ஆயுதப்பயிற்சியும், நிதி உதவியும் செய்து வருகிறது. பயங்கரவாதிகளை ஆதரிப்பதின் மூலம், அண்டை நாடுகளுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. 

ஏப்ரலில் நடந்த பயங்கரவாத தாக்குதல் போல் இனி ஒருமுறை நடந்தால், இந்தியாவின் பதில் இன்னும் தீவிரமாக இருக்கும். பயங்ரவாதிகள் மற்றும் அவர்களின் இருப்பிடங்கள் முற்றிலும் வேரறுக்கப்படும். அவர்களை தேடித் தேடி சென்று அழிப்போம் என ஜெய்சங்கர் கூறினார்.

இதையும் படிங்க: மீண்டும் தலைதூக்கும் கொரோனா.. 7 ஆயிரத்தை நெருங்கும் பாதிப்பு.. பீதியில் மக்கள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share