×
 

பாகிஸ்தானை பொளந்து கட்டியிருப்போம்.. ஆனா! ஆபரேசன் சிந்தூரில் நடந்த அரசியல்.. உண்மையை உடைத்த கேப்டன்..!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் சில விமானங்களை இந்தியா இழந்தது என இந்திய கடற்படை அதிகாரி கேப்டன் சிவகுமார் தெரிவித்தார்.

காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ல் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமை இடமாக கொண்டு செயல்படும் லக்‌ஷர் இ தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் (The Resistance Front - TRF) என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. 

இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் கடந்த 6-ந்தேதி நள்ளிரவில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தியது. ஜெய்ஷ் இ முகமது தலைவன் மசூத் அசார் குடும்பத்தினர் உட்பட 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 

இதனால் இரு நாடுகளிடையே தீவிர சண்டை மூண்டது. பாகிஸ்தான் விமான ஏவுதளங்களை இந்திய விமானப்படை சுக்கு நூறாக்கியது. பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது. அதன்பின்னர் பாகிஸ்தான் கெஞ்சியதால் போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது. இந்த நிலையில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, 6 இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் சொன்னார்.

இதையும் படிங்க: இறங்கி அடித்ததா இந்தியா? ஒப்பாரி வைக்கும் பாகிஸ்தானுக்கு மத்திய அமைச்சகம் ரிப்ளை..!

ஆனால், இந்திய அரசு தரப்பில் அதுபற்றி விளக்கம் ஏதும் தரப்படவில்லை. அதே நேரத்தில் இந்தியா போர் விமானத்தை இழந்ததை இந்திய முப்படைகளின் தலைமை தளபதி (CDS) அனில் சவுகான் ஒப்புக் கொண்டார். சிங்கப்பூரில் டிவிக்கு பேட்டியளித்த அனில் சவுகானிடம் இந்தியாவின் 6 போர் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதா? என கேட்கப்பட்டது. அதை அனில் சவுகான் திட்டவட்டமாக மறுத்தார்.

பாகிஸ்தான் சொல்வதில் உண்மை இல்லை. நாம் எத்தனை போர் விமானங்களை இழந்தோம் என்பது முக்கியம் இல்லை. அவை ஏன் சுட்டு வீழ்த்தப்பட்டன என்ற காரணத்தை கண்டறிவது தான் முக்கியம். நம் தவறுகளை கண்டறிந்து,  அவற்றை சரி செய்து மறுபடியும் பாகிஸ்தான் மீது கடுமையான தாக்குதல் நடத்தினோம். முன்பை விட நீண்ட தூர இலக்குகளை துல்லியமாக தாக்கி பாகிஸ்தானை நிலைகுலைய வைத்தோம் என முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் கூறினார்.

இந்திய விமானப்படை போர் விமானத்தை இழந்ததை அனில் சவுகான் ஒப்புக் கொண்டாலும் கூட எத்தனை போர் விமானம் என குறிப்பிட்டு சொல்ல மறுத்து விட்டார். இந்த நிலையில், இந்தோனேஷிய தலைநகர் ஜாகர்த்தாவில் நடந்த கருத்தரங்கில் இந்திய கடற்படை அதிகாரி கேப்டன் சிவகுமார் பேசும்போது, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் சில விமானங்களை இந்தியா இழந்தது என சொன்னார். 

விமானங்களை இந்திய விமானப்படை பறிகொடுத்தது ஏன்? என்பதற்கான காரணத்தையும் கேப்டன் சிவகுமார் தெரிவித்தார். பாகிஸ்தானின் ராணுவ தளங்கள் மற்றும்அவர்களது வான் பாதுகாப்பு கவச அமைப்புகளை தாக்க வேண்டாம் என, நமது ஆட்சியாளர்கள் கூறினர். அதனால்தான் நாம் விமானங்களை இழக்க நேர்ந்தது என சிவகுமார் கூறினார்.

ஆரம்பத்தில் பின்னடைவைச் சந்தித்தாலும், அதன் பிறகு நாங்கள் எங்கள் போர் வியூகத்தை மாற்றிக் கொண்டு  தாக்குதல் நடத்தினோம்;  முதலில் பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்புகளை தாக்கினோம். பிறகு, ராணுவ  தளங்களை  தாக்கினோம். பிரம்மோஸ் ஏவுகணைகளை பயன்படுத்தி அனைத்து தாக்குதல்களையும் நடத்தினோம் என கேப்டன்  சிவகுமார் கூறினார். 

இதையும் படிங்க: கனடாவுக்கு வேலைக்கு வர்றீங்களா? சோலி முடிஞ்சுது! இந்திய பெண் இன்ஸ்டாவில் வார்னிங்.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share