எண்ணெய் கப்பலுக்குள் ஏவுகணை! கொச்சி துறைமுகமே அழியும்! உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய கடற்படை வீரர்கள்!
கொச்சி வந்தடைந்த கச்சா எண்ணெய் கப்பலில் இருந்து, வெடிக்காத ஏவுகணையை இந்திய கடற்படை வீரர்கள் மிக ஆபத்தான ஆபரேஷன் மூலம் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
மத்திய கிழக்கு கடல் பகுதியில் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளான கச்சா எண்ணெய் கப்பலில் சிக்கியிருந்த வெடிக்காத ஏவுகணையை இந்திய கடற்படை வீரர்கள் மிக ஆபத்தான ஆபரேஷன் மூலம் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். இந்த சம்பவம் இந்தியாவின் கடல் பாதுகாப்பு திறனை உலகுக்கு மீண்டும் நிரூபித்துள்ளது.
மார்ஷல் தீவுகளின் கொடியுடன் பயணித்த 'எம்டி ஒலிம்பிக் லைஃப்' என்ற கச்சா எண்ணெய் கப்பல், கடந்த மே 26 அன்று ஓமன் வளைகுடாவில் சென்றுகொண்டிருந்தபோது ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளானது. ஏவுகணை கப்பலின் வெளிப்புறத்தைத் துளைத்து பல அறைகளைக் கடந்து, லட்சக்கணக்கான பேரல் கச்சா எண்ணெய் சேமித்திருந்த முக்கிய டேங்கிற்குள் சென்று சிக்கியது. அதிர்ஷ்டவசமாக அது வெடிக்கவில்லை. ஆனால், எந்த நேரத்திலும் வெடிக்கக்கூடிய 'டைம் பாம்' போன்ற நிலையில் இருந்தது.
கப்பலில் இந்திய மாலுமிகள் இல்லை என்றாலும், கொச்சி துறைமுகத்தை நோக்கி 2,000 கிலோமீட்டர் தூரம் பயணித்து வந்தது. கப்பல் வெடித்திருந்தால் கொச்சி துறைமுகமே பெரும் சேதத்துக்கு உள்ளாகி, சுற்றுச்சூழல் பேரழிவு ஏற்பட்டிருக்கும்.
இதையும் படிங்க: தரை, வான், கடல்வழி பாதுகாப்பு அடிபொலி!! 3 அதிநவீன ஏவுகணைகள் சோதனை வெற்றி! இந்தியா அசத்தல்!
தகவல் அறிந்ததும் இந்திய கடற்படையின் கொச்சி தலைமையகத்தைச் சேர்ந்த சிறப்பு வெடிகுண்டு நிபுணர் குழு உடனடியாகக் களமிறங்கியது. அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி முதலில் ஏவுகணையின் வெடிப்புப் பொறியை செயலிழக்கச் செய்தனர். பின்னர் மிகுந்த எச்சரிக்கையுடன் ஏவுகணையை எரிபொருள் டேங்கிலிருந்து பாதுகாப்பாக வெளியே எடுத்து, பாதுகாப்பான இடத்துக்கு மாற்றினர். இந்த ஆபரேஷன் மிகவும் சிக்கலானதாக இருந்தது.
தற்போது அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் இடையே நிலவும் பதற்றம் காரணமாக மத்திய கிழக்கு கடல் வழிகளில் வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இந்தச் சூழலில், எந்த நாட்டுக் கப்பல் என்ற பாரபட்சமின்றி சர்வதேச கடல் பாதுகாப்புக்கு இந்தியா துணை நின்றுள்ளது. இந்த வெற்றிகரமான ஆபரேஷன் மூலம் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியா ஒரு வலுவான மற்றும் நம்பகமான பாதுகாப்பு சக்தி என்பதை உலக நாடுகளுக்கு நிரூபித்துள்ளது.
கடற்படை அதிகாரிகள் இந்த ஆபரேஷனை “மிக உயர் ஆபத்து நிறைந்த மற்றும் வெற்றிகரமான மீட்பு நடவடிக்கை” எனப் பெருமையுடன் குறிப்பிட்டனர். இந்தச் சம்பவம் இந்திய கடற்படையின் தயார்நிலை மற்றும் தொழில்நுட்ப திறனை மீண்டும் உலகுக்கு நினைவூட்டியுள்ளது.
இதையும் படிங்க: ஓமன் கடற்கரையில் இந்திய மாலுமிகள் கொல்லப்பட்ட விவகாரம்! அமெரிக்க தூதருக்கு பறந்தது சம்மன்!