×
 

நாட்டின் 7 முக்கிய ரயில் பாதைகள் 4 வழித்தடங்களாக மாற்றம்! மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்!

பாரதத்தின் முக்கிய ரயில் வழித்தடங்களை 4 வழித்தடங்களாக விரிவுபடுத்தும் திட்டம் குறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஒட்டுமொத்த ரயில் போக்குவரத்தில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் 11,000 கிலோமீட்டர் நீளம் கொண்ட 7 உயர் அடர்த்தி வழித்தடங்களை (High Density Corridors), அதிநவீன வசதிகளுடன் 4 வழித்தடங்களாக (4-track expansion) விரிவுபடுத்தும் பிரம்மாண்ட திட்டத்தை மத்திய அரசு முழுவீச்சில் முன்னெடுத்து வருவதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

இந்திய ரயில்வேயின் தற்போதைய கட்டமைப்பு மற்றும் எதிர்காலப் போக்குவரத்துத் தேவைகள் குறித்து விளக்கிய அவர், இந்திய ரயில்வே நெட்வொர்க்கில் வெறும் 16 சதவீத அளவை மட்டுமே கொண்டுள்ள இந்த 7 முக்கிய வழித்தடங்கள், நாட்டின் மொத்த ரயில் போக்குவரத்தில் சுமார் 41 சதவீதப் பங்கை ஒற்றைக் கையாகக் கையாண்டு வருவதாகச் சுட்டிக்காட்டினார். டெல்லி - ஹவுரா, ஹவுரா - சென்னை, சென்னை - மும்பை, மும்பை - டெல்லி, டெல்லி - சென்னை, மும்பை - ஹவுரா மற்றும் டெல்லி - கவுகாத்தி ஆகிய நாட்டின் மிக முக்கியப் பொருளாதார மற்றும் பெருநகரங்களை இணைக்கும் வழித்தடங்களே இந்த மெகா விரிவாக்கத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த 4 வழிப்பாதை விரிவாக்கத் திட்டத்தின் மூலம், நாளுக்கு நாள் அபரிமிதமாக அதிகரித்து வரும் பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்தைக் கையாள்வதற்கான கட்டமைப்புத் திறன் பல மடங்கு அதிகரிக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் மிக அதிக நெரிசல் கொண்ட இந்த வழித்தடங்களில் ரயில்களின் இயக்க வேகம் அதிகரிப்பதுடன், புதிய ரயில்களை இயக்குவதற்கான வழிவகைகளும் உருவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு 2 புதிய உறுப்பினர்கள்! தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!

மேலும், சரக்குப் போக்குவரத்தை சாலை மார்க்கத்திலிருந்து ரயில்வேக்கு மாற்றுவதன் மூலம் சரக்குக் கையாளும் செலவுகள் பெருமளவில் குறையும் என்றும், கார்பன் உமிழ்வைக் குறைத்து சுற்றுச்சூழலுக்கு உகந்த தூய்மையான மற்றும் பசுமைப் போக்குவரத்தை ஊக்குவிக்க இது பேருதவியாக அமையும் என்றும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். அதிக திறன், குறைந்த போக்குவரத்துச் செலவு மற்றும் உலகத்தரம் வாய்ந்த அதிவேகப் பயணத்தை இலக்காகக் கொண்டு இந்திய ரயில்வே துறை அதிவேக மாற்றத்தை நோக்கி முன்னேறி வருகிறது.

இதையும் படிங்க: 7-வது நாளாக தொடரும் போராட்டம்! முதல்வர் எங்களை ஏன் சந்திக்க மறுக்கிறார்? தூய்மை பணியாளர்கள் கேள்வி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share