×
 

அமெரிக்க கப்பல் மீது தாக்குதல்!! இந்தியர் மரணம்! ஈராக் கடற்பரப்பில் ஈரான் கோர தாண்டவம்!

ஈராக்கிற்கு அருகே அமெரிக்காவிற்கு சொந்தமான டேங்கர் கப்பலான சபேசியா விஷ்ணுவை ஈரான் தற்கொலைப் படகு தாக்கியதில் இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டார்.

ஈராக் துறைமுகத்திற்கு அருகே அமெரிக்காவுக்கு சொந்தமான கச்சா எண்ணெய் டேங்கர் கப்பலான சேஃப்சீ விஷ்ணு (Safesea Vishnu) மீது ஈரான் நடத்திய தற்கொலை படகு தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போரின் பின்னணியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈராக்கின் கோர் அல் ஜூபைர் (Khor al-Zubair) துறைமுகத்திற்கு அருகே, ஈராக் நீர்வழியில் நங்கூரமிட்டிருந்த இந்த கப்பல் மீது ஈரானிய தற்கொலை படகு (suicide boat) தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் கப்பலில் தீப்பிடித்து வெடிப்பு ஏற்பட்டது. கப்பலில் இருந்த 28 பேரில் ஒரு இந்திய குழுவினர் உயிரிழந்தார். மீதமுள்ள 27 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு பஸ்ரா நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்திய தூதரகம் இந்த இழப்புக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது.

சேஃப்சீ விஷ்ணு கப்பல் 2007ஆம் ஆண்டு கட்டப்பட்டது. 228.6 மீட்டர் நீளமும், 32.57 மீட்டர் அகலமும் கொண்ட இது 42,010 டன் மொத்த எடை கொண்ட கச்சா எண்ணெய் டேங்கராகும். மார்ஷல் தீவுகள் கொடியுடன் பயணித்த இந்த கப்பல் அமெரிக்க நிறுவனத்துக்கு சொந்தமானது. 

இதையும் படிங்க: அமெரிக்க எண்ணெய் கப்பல் மீது பயங்கர தாக்குதல்!! பழிக்கு பழி தீர்க்கும் ஈரான்!! அதிகரிக்கும் பதற்றம்!

ஈரான்-அமெரிக்கா-இஸ்ரேல் இடையேயான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் அமெரிக்கா, இஸ்ரேல், ஐரோப்பிய நாடுகளுடன் தொடர்புடைய கப்பல்களை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இதற்கு முன் ஹார்முஸ் ஜலசந்தி அருகே தாய்லாந்து கொடியுடன் கூடிய கப்பல் தாக்கப்பட்டதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்திருந்தது. இப்போது இந்திய குழுவினர் பாதிக்கப்பட்டுள்ளதால், இந்திய மாலுமிகளை பாதுகாக்க வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இந்திய தூதரகங்கள், கடற்படை அதிகாரிகள் குழுவினரை மீட்க உதவி செய்துள்ளனர்.

இந்த தாக்குதல் உலக எண்ணெய் வர்த்தகத்தை மேலும் பாதிக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக உலகின் 20% கச்சா எண்ணெய் செல்வதால், தொடர் தாக்குதல்கள் எரிபொருள் விலை உயர்வு, சப்ளை சங்கடத்தை ஏற்படுத்தலாம். 

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மாற்று பாதைகளை ஆராய்ந்து வருகின்றன. போர் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்திய குழுவினரின் பாதுகாப்பு முதன்மை பெற வேண்டும் என்று அரசியல் வட்டாரங்கள் வலியுறுத்துகின்றன.

இதையும் படிங்க: ஈரான் தாக்குதலில் இந்தியர் 3 பேர் பலி!! 20 பேர் காயம்!! எண்ணெய் டேங்கர் கப்பலை சுக்குநூறாக்கிய ட்ரோன்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share