பிரதமர் மோடி மட்டும் தடுக்காம இருந்திருந்தா?! இன்னைக்கு நிலைமையே வேற!! மத்திய அமைச்சகம் தகவல்!!
பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதால், விலை உயர்வு சுமையை பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களே ஏற்றுள்ளதாக, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வைத் தடுத்து நிறுத்த பிரதமர் நரேந்திர மோடி முக்கிய முடிவு எடுத்துள்ளார். இதனால் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை ஏற்றுக் கொண்டுள்ளன.
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்ட விளக்கத்தில், “ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து போர் தொடுத்துள்ளதால், உலக அளவில் எண்ணெய் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் கச்சா எண்ணெய் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இந்த சூழலில் எண்ணெய் நிறுவனங்கள் விலையை உயர்த்த அனுமதி கேட்டன. ஆனால் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதால், நுகர்வோர் மீது சுமையை ஏற்றாமல் எண்ணெய் நிறுவனங்களே இழப்பை ஏற்றுக் கொண்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, டில்லியில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 24.40 ரூபாயும், டீசலுக்கு 104.99 ரூபாயும் இழப்பை எண்ணெய் நிறுவனங்கள் சந்தித்து வருகின்றன. விலை உயர்வு அனுமதிக்கப்பட்டிருந்தால் டில்லியில் பெட்ரோல் விலை 119 ரூபாயாகவும், டீசல் விலை 193 ரூபாயாகவும் உயர்ந்திருக்கும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஈரான் வெடிமருந்து கிடங்கு சர்வநாசம்!! பங்கர் பஸ்டர் போட்ட அமெரிக்கா! அதிகாலையிலேயே அதிரடி!
ஈரான்-இஸ்ரேல் இடையே ஒரு மாதத்துக்கு மேலாக நீடிக்கும் போர் பதற்றத்தால் உலக நாடுகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளன. ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் பொதுமக்கள் பொது போக்குவரத்தைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்தியா, ரஷ்யா, ஈரான் உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் கொண்டுள்ள உறவால் பெரிய அளவில் எரிசக்தி தட்டுப்பாடு ஏற்படவில்லை.
மேலும், 6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. ‘பிங் ஷுன்’ என்ற எண்ணெய் கப்பல் 6 லட்சம் பேரல் கச்சா எண்ணெயுடன் குஜராத்தின் வாடினார் துறைமுகத்தை நாளை மறுநாள் வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடியின் இந்த முடிவு நுகர்வோர் நலனை முன்னிறுத்தியதாக பார்க்கப்படுகிறது. சர்வதேச சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப விலையை உயர்த்தாமல், பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் எண்ணெய் நிறுவனங்கள் இழப்பை ஏற்றுக் கொண்டுள்ளன. இது தமிழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு பெரும் ஆறுதலாக அமைந்துள்ளது.
எனினும், போர் நீடித்தால் எதிர்காலத்தில் எரிபொருள் விலை உயர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். தற்போதைக்கு பிரதமரின் தலையீட்டால் விலை உயர்வு தடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஈரானின் புதிய தலைவர் உயிரோட இருக்காரா? அதிபர் ட்ரம்ப் எழுப்பிய சந்தேகம்! ஈரான் பதில் கடிதம்!