ஈரானுக்கு ஆதரவாக வந்த லெபானான்!! இஸ்ரேல் கண்மூடித்தனமான தாக்குதல்!! 9 பேர் பலி!
லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பெய்ரூத்: மேற்காசியப் போர் வேகமெடுத்து வரும் நிலையில், இஸ்ரேல் லெபனான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இன்று தெற்கு லெபனானில் நடைபெற்ற இரு தாக்குதல்களில் மொத்தம் 9 பேர் உயிரிழந்தனர், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டு தாக்குதல் நடைபெற்று வரும் சூழலில், ஈரானுக்கு ஆதரவாக லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் லெபனான் எல்லைப் பகுதிகளை தொடர்ந்து குண்டு மழையால் தாக்கி வருகிறது. இதனால் லெபனான் மக்கள் பீதியடைந்து தங்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு தப்பி ஓடி வருகின்றனர்.
இன்று காலை தெற்கு சிடோன் பகுதியில் உள்ள அட்லோன் நகரம் மற்றும் அருகிலுள்ள பாலஸ்தீன அகதி முகாம் மீது இஸ்ரேல் விமானங்கள் தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் 6 பேர் உடனடியாக உயிரிழந்தனர். 4 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: மேற்காசிய போரை நிறுத்த அமெரிக்கா 15 அம்ச திட்டம்?! முன்மொழியும் பாக்.,! ஏற்குமா ஈரான்?!!
அதே நேரத்தில், ஹபூஷ் நகரிலும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மேலும் 3 பேர் கொல்லப்பட்டனர். 18 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த இரு தாக்குதல்களாலும் லெபனானில் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.
லெபனான் அதிகாரிகள் கூறுகையில், “இஸ்ரேல் தொடர்ந்து அப்பாவி மக்கள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்” என்று தெரிவித்தனர்.
ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்தாவிட்டால் தாக்குதல் தீவிரமடையும் என்று இஸ்ரேல் எச்சரித்துள்ளது. இதனால் லெபனான்-இஸ்ரேல் எல்லைப் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.
உலக நாடுகள் பலவும் இந்தத் தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன. ஐ.நா. சபை உள்ளிட்ட அமைப்புகள் உடனடியாக போர் நிறுத்தத்துக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றன. ஆனால் இதுவரை எந்த அமைப்பும் உறுதியான தீர்வை முன்வைக்கவில்லை.
மேற்காசியப் போர் இப்போது லெபனானையும் முழுமையாக உள்ளிழுத்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி பிரச்சினை, எரிபொருள் நெருக்கடி ஆகியவற்றுடன், லெபனான் தாக்குதலும் உலக அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மேற்காசிய போர் பதற்றம்! அதிகரிக்கும் எரிபொருள் தட்டுப்பாடு! முதல் நாடாக அவசரநிலையை பிரகடனப்படுத்தியது பிலிப்பைன்ஸ்!