பீகார் தேர்தலில் படுதோல்வி… தானே 100% பொறுப்பு.. பிரசாந்த் கிஷோர் வேதனை…!
பீகார் தேர்தலில் ஜன் சுராஜ் கட்சி அடைந்த தோல்விக்கு 100% தாமே பொறுப்பேற்பதாக பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.
பீகாரின் அரசியல் வரலாற்றில் 2025 சட்டமன்றத் தேர்தல் ஒரு முக்கியத்துவமான திருப்புமுனையாக அமைந்தது. நவம்பர் 6 மற்றும் 11 ஆம் தேதிகளில் நடைபெற்ற இந்தத் தேர்தலில், 243 தொகுதிகளுக்கான வாக்குகள் நவம்பர் 14 அன்று எண்ணப்பட்டன. 7.45 கோடி வாக்காளர்கள் பங்கேற்ற இந்தத் தேர்தல், 1951 முதல் பீகாரின் அதிக வாக்காளர் பங்கேட்பை (67.13%) பதிவு செய்தது. ஆனால், இந்த உற்சாகமான பங்கேட்புக்கு மாறாக, காங்கிரஸ் கட்சி தனது எதிர்பார்ப்புகளைத் தாண்டி பெரும் பின்னடைவை சந்தித்தது.
2020 தேர்தலில் 19 இடங்களைப் பெற்ற காங்கிரஸ், இம்முறை வெறும் 2 முதல் 7 இடங்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டது, இது கட்சியின் அரசியல் செல்வாக்கின் சரிவை வெளிப்படுத்துகிறது. பீகார் சட்டப்பேரவை தேர்தலை பொறுத்தவரை 2000-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியில் இருந்தனர். முதலமைச்சராக இருக்கக்கூடிய நிதீஷ் குமார் பாஜக அணியின் சார்பில் போட்டியில் இருந்தார்.
அதேபோன்று தேஜஸ் யாதவ் காங்கிரஸ் இடதுசாரிகளோடு கூட்டணி அமைத்து இறங்கி இருந்தார். தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. பெரும்பான்மையின் நிரூபித்து பாஜக பல்வேறு இடங்களில் வெற்றியடைந்தது. காங்கிரஸ் கட்சி தோல்வி முகத்தை கண்டது. இதேபோல் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி படுதோல்வி அடைந்தது.
இதையும் படிங்க: பீகாரில் NDA வெற்றிக்கு இது தான் காரணம்... ஜன் சுராஜ் கட்சி பகிரங்க குற்றச்சாட்டு..!
பீகார் தேர்தலில் தனது ஜன் சுராஜ் கட்சி அடைந்த மோசமான தோல்விக்கு 100% தாமே பொறுப்பேற்பதாக பிரசாந்த் கிஷோர் அறிவித்து உள்ளார். நேர்மையாக பணியாற்றியும் தங்களால் வெற்றிபெற முடியவில்லை என்றும் ஆதங்கம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பிரச்சினையால் முட்டி மோதும் லாலு குடும்பம்... கட்சி நிர்வாகிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்...!