×
 

நடுக்காட்டில் துப்பாக்கிச்சூடு.. மாவோயிஸ்ட் முக்கிய தளபதி காலி.. ஜார்கண்டில் பாதுகாப்பு படை அதிரடி..

தேடுதல் வேட்டையின் போது பாதுகாப்பு படையினரை கண்ட மாவோயிஸ்ட்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் கொடுத்தனர். ஞாயிறு இரவு முதல் திங்கள் காலை வரை சண்டை நடந்தது.

சத்தீஸ்கர், ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா மாநிலங்களில் நக்சலைட்களின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வரும் அரசின் முயற்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் உத்தரவுப்படி, இந்த ஆண்டு துவக்கம் முதலே நக்சல்களுக்கு எதிரான வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. அதன் படி, அடர்ந்த வனப்பகுதி, மலைகளில் பதுங்கியுள்ள நக்சல்களை ஒடுக்குவதற்காக சிஆர்பிஎப் மற்றும் சத்தீஸ்கர், ஆந்திரா, தெலங்கானா மாநில சிறப்பு அதிரடிப்படை போலீசார் களம் இறக்கப்பட்டுள்ளனர். 

ஆபரேஷன் பிளாக் பாரஸ்ட் என்ற பெயரில் நடத்தப்பட்டு வரும் நக்சல்களை ஒடுக்கும் வேட்டையில் இதுவரை 54 நக்சல்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 84 பேர் சரண் அடைந்துள்ளனர். நக்சல் இயக்க தலைவன் பசவராஜ் கொல்லப்பட்டதின் மூலம், நக்சல்களுக்கு ஏதிரான சண்டையில் புதிய மைல்கல்லை அடைந்துள்ளோம் என பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.

இதையும் படிங்க: பாதுகாப்பு படை வீரர்கள் வெறியாட்டம்.. லட்சக்கணக்கில் சன்மானம் அறிவிக்கப்பட்ட நக்சல்கள் க்ளோஸ்..!

இந்த நிலையில் ஜார்க்கண்டின் லதேஹர் மாவட்டத்தில் உள்ள கரம்காட் மற்றும் டவுனா காடுகளில் மாவோயிஸ்ட்கள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் வந்துள்ளது.  தேடுதல் வேட்டையின் போது பாதுகாப்பு படையினரை கண்ட மாவோயிஸ்ட்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் கொடுத்தனர். ஞாயிறு இரவு முதல் திங்கள் காலை வரை சண்டை நடந்தது. 

அதன் பின் நடந்த தேடுதலில் தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் உயர்மட்ட தளபதி மணீஷ் யாதவ் உடல் கிடைத்தது. மணீஷ் யாதவ் தலைக்கு 5 லட்சம் பரிசு தொகை அறிவிக்கப்பட்டு இருந்தது. 10 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் குந்தன் கெர்வார் கைது செய்யப்பட்டு உள்ளார்.  துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டு உள்ளன என பிளம் மண்டலம் போலீசார் கூறி உள்ளனர்.   

மணீஷ் யாதவ் மற்றும் குந்தன் சிங் கெர்வார் 12 ஆண்டுகளாக இந்த அமைப்பில் உள்ளனர். கர்வா, சத்தீஸ்கர் மற்றும் லதேஹரில் மணீஷ் மீது 40 வழக்குகளும், குந்தன் மீது 27 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. முன்னதாக மே 24 அன்று நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் இரண்டு மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டனர்.
காடுகளில் வேறு மாவோயிஸ்ட்கள் மறைந்து உள்ளனரா என அப்பகுதியில் தேடுதல் வேட்டை தொடர்கிறது.

ஆபரேஷன் பிளாக் பாரஸ்ட் என்ற பெயரில் நடத்தப்பட்டு வரும் நக்சல்களை ஒடுக்கும் வேட்டையில் இதுவரை பல நக்சல்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலர் சரண் அடைந்துள்ளனர். நக்சல் இயக்க தலைவன் பசவராஜ் கொல்லப்பட்டதின் மூலம், நக்சல்களுக்கு ஏதிரான சண்டையில் புதிய மைல்கல்லை அடைந்துள்ளோம். பிரதமர் மோடி தலைமையிலான அரசு, மார்ச் 2026க்குள் நக்சல் இயக்கத்தை வேரறுக்கும் என, அமித் ஷா தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: சத்தீஸ்கரில் பிறந்தது விடியல்..! நக்சல் ஒழிப்பால் 17 கிராமங்களுக்கு கிடைத்த பரிசு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share