#CORONA: இந்தியாவில் 4 ஆயிரத்தை நெருங்கியது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை... பீதியில் மக்கள்!
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4, நெருங்கியுள்ளது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு நாட்டையே புரட்டி போட்ட கோவிட்-19 பல உயிர்களை காவு வாங்கியது. லட்சக்கணக்கானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு மீண்டு வந்தனர். முழு ஊரடங்கு இதுவரை கண்டிடாத அளவு மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒரு வழியாக கோவில் 19 தடுப்பூசி உருவாக்கப்பட்ட நிலையில் ஒரு வழியாக கொரோனா அலை ஓய்ந்தது.
இந்த நிலையில் மீண்டும் கொரோனா பாதிப்பு வீரியம் அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. நாட்டில் NB.1.8.1 மற்றும் LF.7 ஆகிய கோவிட்-19 புதிய தொற்றுநோய் பரவல் மீண்டும் தொடங்கியுள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக முகக்கவசம் அணிய தமிழக பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது. பொதுமக்கள் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சுவாச நோய் தொற்றுகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வேகமெடுக்கும் கொரோனா.. மீண்டும் மாஸ்க்..! பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!!
இந்த நிலையில், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்கியது. கேரளாவில் அதிகபட்சமாக 1435 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் 506 பேரும், டெல்லியில் 483 பேரும், குஜராத்தில் 338 பேரும், கர்நாடகாவின் 253 பேரும் தமிழகத்தில் 189 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், உத்திரபிரதேசத்தில் 157 பேரும், புதுச்சேரியில் ஏழு பேரும் குருநாதாள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்றைய நிலவரப்படி கொரோனா பாதிப்பால் 32 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சென்னையில் கொரோனாவால் ஒருவர் பலி! பொதுமக்கள் கலக்கம்...