தயாரா இருக்கோம்! துணை ஜனாதிபதி தேர்தல் ஒரு சித்தாந்த போராட்டம்.. KC வேணுகோபால் பரபரப்பு பேட்டி..!
துணை ஜனாதிபதி தேர்தல் ஒரு சித்தாந்த போராட்டம் என கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜகதீப் தன்கர், உடல்நலக் காரணங்களைக் காட்டி தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 9, 2025 அன்று நடைபெறவுள்ள குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தேர்தலுக்கு சி.பி. ராதாகிருஷ்ணனை பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி தனது வேட்பாளராக அறிவித்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த மூத்த பாஜக தலைவரும், தற்போது மகாராஷ்டிர ஆளுநராக இருக்கும் சி.பி. ராதாகிருஷ்ணன் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு போட்டியாக இந்தியா கூட்டணி சார்பாக சுதர்ஷன் ரெட்டி போட்டியிடுவார் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று அறிவித்துள்ளார். நாளை மறுநாள் சுதர்ஷன் ரெட்டி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.
ஹைதராபாத்தில் 1946-ல் பிறந்த சுதர்ஷன் ரெட்டி ஆந்திரா ஹைகோர்ட்டில் வழக்கறிஞராக பணியாற்றி 2007 உச்சநீதிமன்ற நீதிபதியானவர். 2005 இல் கௌஹாத்தி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட சுதர்சன் 2007 முதல் 2011 வரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றினார். நான்காண்டுகள் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய சுதர்ஷன் ரெடி கடந்த 2011 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றவர். தற்போது துணை குடியரசு தலைவர் பதவிக்கு இந்தியா கூட்டணி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: தம்பி விஜய் தூங்கி எழுந்தாச்சா? இது சினிமா கிடையாது! விளாசிய தமிழிசை…
துணை ஜனாதிபதி தேர்தலுக்கான இந்திய கூட்டணி வேட்பாளராக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி பி. சுதர்ஷன் ரெட்டி தேர்வு செய்யப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே சி வேணுகோபால் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, இது ஒரு சித்தாந்தப் போராட்டம் என்று கூறினார். கடைசி துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்ததற்கான காரணம் நாட்டுக்கு தெரியாது என்று தெரிவித்தார். ஒருபுறம், அரசியலமைப்பு உரிமைகளுக்காக நாங்கள் போராடுகிறோம் என்றும் இந்த நாடு பெரிய சித்தாந்தப் பிரச்சினைகளை எதிர்கொள்வதாகவும் அரசியலமைப்பைக் காப்பாற்ற நாங்கள் போராடுகிறோம் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: DMK ஜெயிக்கும்போது ஓட்டு மெஷின் சரியா இருந்துச்சா? தமிழிசை சரமாரி கேள்வி..!