×
 

சூடுபிடிக்கும் கேரள தேர்தல் தளம்..!! நாளை பிரச்சாரத்தை தொடங்குகிறார் ராகுல்காந்தி..!!

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள நாளை கோழிக்கோட்டுக்கு வருகிறார்.

தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய ஐந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் தேதிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்துள்ளது. இதன்படி, கேரளாவின் 140 சட்டமன்றத் தொகுதிகள், அசாமின் 126 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 30 தொகுதிகள் ஆகியவை ஏப்ரல் 9-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவுக்கு உள்ளாகும். இந்த மூன்று மாநிலங்கள்/பிரதேசங்களுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெறவுள்ளது.

கேரளாவில் தேர்தல் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், மொத்தம் 140 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் (மார்ச் 23) நிறைவடைந்தது. வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால், அரசியல் கட்சிகள் தங்களது பிரசாரத்தை முழு வீச்சில் முடுக்கிவிட்டுள்ளன. இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி, நாளை (மார்ச் 25, புதன்கிழமை) கேரளாவின் கோழிக்கோடு நகருக்கு வருகை தருகிறார்.

இதையும் படிங்க: 5 மாநில தேர்தல்கள் முடிஞ்சதும் தரமான சம்பவம் இருக்கு..!! மக்களுக்கு வார்னிங் கொடுக்கும் ராகுல் காந்தி..!!

அவர் கோழிக்கோடு, வயநாடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் உள்ள பல தொகுதிகளில் போட்டியிடும் ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் விழாவில் பங்கேற்கிறார். இதையொட்டி, ராகுல் காந்தி கோழிக்கோடு நகரில் பிரமாண்ட ரோடு ஷோ நடத்தவுள்ளார். பின்னர் கடற்கரைப் பகுதியில் பொதுமக்களிடையே தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது. அவருடன் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், வயநாடு மக்களவை உறுப்பினருமான பிரியங்கா காந்தியும் இணைந்து வருகிறார்.

காங்கிரஸ் கட்சி ஏற்கனவே கேரள மக்களுக்கு ஐந்து முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளது. அதில், அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம், கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. இந்த வாக்குறுதிகள் தேர்தல் பிரசாரத்தில் பெரும் எதிரொலியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாளைய நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர்கள் மற்றும் கேரள மாநிலத் தலைவர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர். தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கேரளாவில் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது இறுதிக்கட்ட பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன. 

இதையும் படிங்க: கூட்டணியை விட்டு விலகும் காங்கிரஸ்? என்ன செய்யலாம்... முதல்வர் அவசர ஆலோசனை..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share