ஷாக்கிங் வீடியோ...!! - பாகனை தலைகீழாய் தூக்கி வீசிய யானை... கோயில் திருவிழாக்களில் அடுத்தடுத்து யானைகளால் அசம்பாவிதம்...!
கேரள மாநிலம் திருச்சூரில் கோவில் திருவிழாவில் இளைஞரை தரையில் தூக்கி அடித்த யானை.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் அன்னம்மாநாட மகாதேவர் கோவில் திருவிழாவிற்காக வரவழைக்கப்பட்டிருந்த யானை எழுந்தருளுதல் ஊர்வலம் செல்ல யானை மீது பாகன் ஏறி அமர்ந்து கீழே நின்றிருந்தவரிடம் தெய்வ உருவம் பொருத்திய பட்டயத்தை வாங்க முயன்றார். அப்போது யானை கால் அருகே தெய்வப் பட்டயத்தவுடன் நின்றிருந்த 26 வயது விவேக் என்ற நபரை யானை தும்பிக்கை கொண்டு காலில் சுற்றி வளைத்து பிடித்து தலைகீழாக தூக்கி தரையில் அடித்தது. இதில் விவேக் தலையில் படுகாயங்களுடன் கொச்சி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தை தொடர்ந்து யானையை பாகங்கள் சாந்தப்படுத்தி தனிமைப்படுத்தி பின்னர் லாரியில் ஏற்றி யானையை அழைத்துச் சென்றனர். இச்சம்பவம் குறித்து போலீசார் மற்றும் வனத்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். திடீர் என யானை மிரண்டு ஒரு நபரை தலைகீழாக தூக்கி எரிந்ததால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.
Shocking incident from Thrissur, Kerala 😳
— Hinduism_and_Science (@Hinduism_sci) February 26, 2026
An elephant picked up a young man and hurled him during a temple festival.
He is now critically injured. pic.twitter.com/TypJh15lR2
மற்றொரு சம்பவத்தில், பாலக்காடு பகுதியில் கோவில் திருவிழாவில் ஹைட்ரஜன் பலூன் வெடித்து தீ பிடித்ததால் சிதறி ஓடிய யானைகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: கேரளா: நீர்வழி சுரங்க பாதையில் ஒளி-ஒலி காட்சிகளுடன் பயணம்..!! சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்..!!
கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியில் மனப்பள்ளி காவு கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று இரவு நடைபெற்ற திருவிழாவிற்கு பத்துக்கு மேற்பட்ட யானைகள் வரவழைக்கப்பட்டிருந்தது. நெற்றி பட்டம் சூடிய யானைகள் திருவிழாவில் அணிவகுத்து சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென சாலையோரம் இருந்த ஹைட்ரஜன் பலூன் வெடித்தது. இதில் அருகில் நின்று கொண்டிருந்த யானை மீது தீப்பிடித்தது. இதில் அந்த யானை மிரண்டு ஓடியதும் அருகில் நின்று கொண்டிருந்த மற்ற யானைகளும் சிதறி ஓடியது.
திருவிழாவிற்கு வந்த பக்தர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதில் இரண்டு யானைகள் அங்கிருந்த வாகனங்கள் அனைத்தையும் காலால் மிதித்தும் தந்ததால் குத்தியும் சேதப்படுத்தி உள்ளது. தகவல் அறிந்து அங்கு வந்த வனத்துறையினர் மற்றும் போலீசார் பல மணி நேரம் போராடி யானையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதிர்ஷ்டவசமாக இதில் உயிர் சேதங்கள் ஏற்படவில்லை. கோவில் திருவிழாவில் யானைகள் மிரண்டு ஓடிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: பேரதிர்ச்சி...!! - எமனாக மாறிய மீன்... ஹோட்டலில் கடலுணவு சாப்பிட்ட மாமியார், மருமகன் துடிதுடித்து பலி...!!