கொல்கத்தா மாணவி பாலியல் வழக்கில் பகீர் திருப்பம்.. கிரைம் சீனில் இருந்த 4வது நபர்..!
கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 4வது குற்றவாளியாக கல்லூரியின் செக்யூரிட்டியை போலீசார் கைது செய்து இருக்கின்றனர்.
கொல்கத்தா சட்டக்கல்லூரி வளாகத்தில் 24 வயது மாணவியை, அதே கல்லூரியின் ஊழியர், மாணவர்கள் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நாட்டையே உலுக்கிப்போட்டுள்ளது. கொடூரன்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இப்போது 4வது குற்றவாளியாக கல்லூரியின் செக்யூரிட்டியை போலீசார் கைது செய்து இருக்கின்றனர்.
சம்பவத்தன்று, தேர்வு கட்டணம் செலுத்துவதற்காக பாதிக்கப்பட்ட மாணவி கல்லூரிக்கு சென்றார். கல்லூரியில் திரிணாமுல் கட்சியின் மாணவர் அமைப்பு செயல்படுகிறது. கல்லூரி நேரத்துக்கு பிறகு இந்த அமைப்பு மீட்டிங் நடந்தது. அமைப்பில் மாணவிக்கும் பதவி இருந்ததால், மற்ற நிர்வாகிகளுடன் பங்கேற்றார். கூட்டத்தை 31 வயதான மனோஜித் மிஸ்ரா என்பவன் நடத்தினான். இவன் தான் மாணவி சம்பவத்தில் முக்கிய குற்றவாளி.
இவன் சக்தி வாய்ந்த அரசியல் பின்னணி உடையவன். மேற்கு வங்கத்தை ஆளும் திரிணாமுல் கட்சியில் இருந்தான். குறிப்பாக கட்சியின் தெற்கு கொல்கத்தாவுக்கான மாணவர் அமைப்பின் பொதுச்செயலாளர் பதவி வகித்தான். அதோடு சம்பவம் நடந்த கல்லூரியில் தான் படித்தான். கிரிமினல் வக்கீல் ஆனான். பின்னர் அதே கல்லூரியில் ‛நான் டீச்சிங்’ அலுவலராக வேலைக்கு சேர்ந்தான். அங்கு படிக்கும் போது, கல்லூரிக்கான திரிணாமுல் கட்சி மாணவர் பிரிவின் தலைவனாக இருந்தான்.
இதையும் படிங்க: வாயில் மண்ணை கொட்டி.. 80 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்.. ஒருவரை சுட்டுப்பிடித்த போலீஸ்..!
அலுவலராக வேலைக்கு சேர்ந்த பிறகும் அறிவிக்கப்படாத மாணவர் தலைவனாக பதவியில் தொடர்ந்தான். அவன் என்ன சொன்னாலும் மாணவர்கள் செய்ய வேண்டும். சக்தி வாய்ந்த புள்ளியாக கல்லூரிக்குள் வலம் வந்தான். சம்பவத்தன்று மீட்டிங் முடிந்ததும் மற்ற மாணவர்கள் சென்று விட்டனர்.
மனோஜித் மிஸ்ராவும், அவனுக்கு நெருக்கமான மாணவர்கள் ஜைப் முகமது, பிரமித் முகர்ஜியும் மட்டும் இருந்தனர். அமைப்பு ரீதியாக பேச வேண்டும் என்று கூறி மாணவியையும் நிறுத்தி வைத்திருந்தனர்.
மற்ற மாணவர்கள் சென்றதும், மாணவியை மனோஜித் மிஸ்ரா மிரட்ட ஆரம்பித்தான். தன்னை கல்யாணம் செய்யும் படி வற்புறுத்தினான். ஆனால் மாணவி ஏற்கனவே ஒருத்தரை காதலிப்பதாகவும், அவரை தான் கல்யாணம் செய்யப்போவதாகவும் சொன்னார். ஆத்திரம் அடைந்த மனோஜித் மிஸ்ரா, காதலனை கொலை செய்து விடுவேன் என்றும் மாணவியின் அம்மா, அப்பாவை பொய் வழக்கு போட்டு ஜெயிலில் தள்ளி விடுவேன் என்றம் மிரட்டினான்.
மாணவி தனது காதலில் உறுதியாக இருந்ததால், அவரை பலாத்காரம் செய்யும் முயற்சியில் மனோஜித் மிஸ்ரா இறங்கினான். எவ்வளவோ கெஞ்சியும் அவன் விடவில்லை. அவன் காலில் விழுந்து மாணவி கெஞ்சினால் அப்போதும் அவன் வெறி அடங்கவில்லை. மற்ற 2 மாணவர்கள் உதவியுடன் மாணவியை தாக்கி அவரது ஆடையை கழற்றினான். மிரட்டி பலாத்காரம் செய்தான்.
தப்பிக்க பார்த்த மாணவியை ஹாக்கி ஸ்டிக்கால் அடித்தான். மனோஜித் மிஸ்ரா பலாத்காரம் செய்யும் போது, மற்ற மாணவர்கள் 2 பேரும் பக்கத்தில் நின்றனர். வீடியோவும் எடுத்தனர். சம்பவத்தின் போது மாணவியை 2 வீடியோ எடுத்து இருந்தனர். அதை வெளியில் பரப்பி மானபங்கம் படுத்தி விடுவோம் என்றும் மிரட்டினர். இவ்வளவு மிரட்டலையும் தாண்டி தான் மாணவி தைரியமாக புகார் கொடுக்க முன் வந்தார்.
கொடூரன்களுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உடந்தையாக இருந்ததாக இப்போது கல்லூரி செக்யூரிட்டியையும் போலீசார் கைது செய்து இருக்கின்றனர். இது தொடர்பாக போலீசார் கூறியது: கைதான செக்யூரிட்டியின் பெயர் பினாகி பானர்ஜி. சம்பவம் நடந்த போது கொடூரன்கள் கல்லூரியின் மெயின் கேட்டை மூடி விட்டனர். மாணவியை செக்யூரிட்டி ரூமுக்கு தான் இழுத்து சென்றனர்.
அங்கே இருந்த செக்யூரிட்டியை மிரட்டி வெளியே அனுப்பி விட்டனர். இரவு 7:30 முதல் 10:50 வரை கொடூர சம்பவம் நடந்தது. அவ்வளவு நேரமும் அந்த ரூமுக்கு வெளியே தான் செக்யூரிட்டி உட்கார்ந்து இருந்தார். மாணவிக்கு உதவ முடியாத அளவுக்கு அவரை மிரட்டி வைத்து இருந்தனர். பயத்தில் அவரும் உதவ முன் வரவில்லை. 3 மணி நேரத்துக்கும் மேலாக மாணவி காப்பாற்றும் படி கதறினார். அவருக்கு உதவ வேண்டியது செக்யூரிட்டியின் கடமை.
நேரடியாக உதவ முடியாவிட்டாலும் கல்லூரி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்து இருக்க வேண்டும். அல்லது போலீசுக்காவது போன் செய்திருக்க வேண்டும். ஆனால் 3 மணி நேரத்துக்கும் மேலாக அவர் மாணவிக்கு எந்த வகையிலும் உதவவில்லை. இதன் மூலம் அவர் கொடூரன்களுக்கு துணை போய்விட்டார். எனவே தான் அவரையும் கைது செய்திருக்கிறோம் என்று போலீசார் கூறினர்.
இதையும் படிங்க: அடுத்த வீட்டு ஜன்னலை எட்டி பாக்குறதுலாம்... திமுகவை லெப்ட் ரைட் வாங்கிய எச். ராஜா!