×
 

“காலில் விழுந்து கதறியும் விடல”... அறைக்குள் அடைத்து 3 மணி நேரம் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை...!

கொல்கத்தாவில் சட்ட கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. 

மேற்கு வங்கம் சட்டக்கல்லூரி மாணவினுடைய கூட்டு பாலியல் வன்கொடுமை என்பது ஜூன் 25ஆம் தேதி சட்டக்கல்லூரி வளாகத்திலேயே நடைபெற்றிருக்கிறது. கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம், சட்டக்கல்லூரி வளாகத்தில் அதுவும் அந்த கல்லூரியில் பணியாற்றக்கூடிய ஒரு ஊழியர் உள்ளிட்ட இரண்டு மாணவர்கள் என மூன்று பேர் செய்து சேர்ந்து இந்த பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டிருப்பது என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஜூன் 25ஆம் தேதி மதியம் 12 மணி அளவில 24 வயதுடைய சட்டக்கல்லூரி மாணவி தேர்வு நடைபெற இருக்கக்கூடிய காரணத்தினால் தேர்வு தொடர்பான விண்ணப்பங்களை விண்ணப்பிப்பதற்காக கல்லூரி வளாகத்திற்கு சென்றிருக்கிறார்.

அந்த நேரத்தில அங்கே இருந்த மனோஜித் மிஸ்ரா  என்ற ஊழியர், அவரும் அதே கல்லூரி முன்னாள் மாணவராக இருக்கிறார். இவருடைய தூண்டுதலின் பெயரில் சையது சயப் அகமது, முகர்ஜி என்ற மேலும் இரண்டு சட்டக்கல்லூரி மாணவர்கள் சேர்ந்து, கல்லூரி வளாகத்தில் இருக்கக்கூடிய பிரதான கேட்டை மூடிவிட்டு மாலை 7:30 மணி முதல் 10:30 மணி வரை செக்யூரிட்டி ரூமில் அடைத்து வைத்து அந்த பெண்ணை மீண்டும், மீண்டும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள். 

மாணவி இது தொடர்பாக அளித்த புகாரில், “மனோஜித் மிஸ்ரா என்பவர் மாணவியை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக தெரிவித்திருக்கிறார். அதற்கு மாணவி தான் வேறு ஒருவரை விரும்புவதாகவும் திருமணம் செய்து கொள்ள முடியாது எனவும் மறுத்திருக்கிறார். இதன் காரணமாகவே மாணவியை திட்டமிட்டு கல்லூரி வளாகத்திற்கு குறிப்பிட்ட அறைக்கு வரவழைத்து இந்த சம்பவத்தை மனோஜித் மிஸ்ரா அரங்கேற்றி இருக்கிறார். 

இதையும் படிங்க: சென்னை ஐஐடிக்குள் பயங்கரம்... உருட்டுக்கட்டையைக் காட்டி மிரட்டி மாணவிக்கு பாலியல் தொல்லை...!

குறிப்பாக மாணவி தன்னுடைய ஆசைக்கு இணங்கவில்லை என்றால் அவரை கொன்றுவிடுவேன் எனவும், அதே போன்று அவரது காதலனையும் குடும்பத்தினர் காதலனை கொன்றுவிட்டு குடும்பத்தார் மீது பழி போட்டு விடுவேன் எனவும் அந்த மாணவியை மிரட்டி இருக்கிறார். மேலும் இந்த சம்பவத்தின் போது புகார் அளித்திருந்த மாணவி புகாரில் விரிவாக என்ன நடைபெற்றது என்று தெரிவித்திருக்கிறார். குறிப்பாக அந்த பாலியல் வன்கொடுமை தன்னை செய்ய வேண்டாம் என காலில் விழுந்து கதறி அழுததாகவும் ஆனால் அதையும் கேட்காமல் ஹாக்கி பேட்டால் கொடூரமாக தாக்கிவிட்டு, ரத்த வெள்ளத்தில் கிடந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: சிறுமி உடல் முழுவதும் பற் தடங்கள்.. காமமிருக சித்தப்பாவின் வெறியாட்டம்.. உடைந்தையான தாய்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share