×
 

பொலிரோ காரும், ரெடிமிக்ஸ் லாரியும் நேருக்கு நேர் மோதி பயங்கரம்... 8 பேர் உடல் நசுங்கி பலி...!

கர்னூலில் பொலிரோ வாகனமும் ரெடிமிக்ஸ் லாரியும் மோதி கொண்ட விபத்தில்    8 பேர் பலி 10க்கும் மேற்பட்டோர் காயம்

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் 16 பேர் பொலிரோ வாகனத்தில் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் மந்த்ராலயத்தில் உள்ள ஸ்ரீ ராகவேந்திர சுவாமி கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் வாகனம்  மந்த்ராலயம்  மண்டலத்தின் சிலகலடோனா என்ற இடத்தில்  சென்றபோது பொலிரோ வாகனமும் சிமெண்ட் கலவை ஏற்றி செல்லும் ரெடிமிக்ஸ் லாரியும்  மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் 8 பொலிரோ வாகனத்தில்  பயணம் செய்த 8 பேர் இறந்தனர். 10 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் கிடைத்தவுடன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளைத் மேற்கொண்டு காயமடைந்தவார்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சடலங்கள் எம்மிகனூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு அனுப்பி வைக்கப்பட்டு விபத்து குறித்து  போலீசார் விசாரணையில் மேற்கொண்டு வருகின்றனர்.

 கர்னூல் சாலை விபத்து குறித்து ஆந்திரப் பிரதேச அமைச்சர்கள் பரத் மற்றும் ஜனார்த்தன் ரெட்டி ஆழ்ந்த அதிர்ச்சியை வெளிப்படுத்தினர். காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களுக்கு அவர்கள் உத்தரவிட்டனர். இதற்கிடையில், ஆந்திரப் பிரதேசத்தில் மற்றொரு பயங்கர சாலை விபத்து நிகழ்ந்துள்ளது.

இதையும் படிங்க: கோர விபத்து..! சம்பவ இடத்திலேயே பலியான 2 தம்பதிகள்..! எட்டயபுரத்தில் சோகம்..!

பொலிரோ மற்றும் லாரி மோதிக்கொண்ட இந்த சம்பவத்தில் எட்டு பேர் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் எம்மிகனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த துயரச் சம்பவம் கர்னூல் மாவட்டம், மந்தாலயம் மண்டலத்திலுள்ள சிலகடோனாவில் நிகழ்ந்தது. உயிரிழந்தவர்கள் கர்நாடகாவின் சிக்மகளூரைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
 

இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் சோக சம்பவம்: கிணற்றில் பாய்ந்த கார்..!! குழந்தைகள் உள்பட 9 பேர் பரிதாப பலி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share