பிரதமர் மோடியை தாக்க சதித்திட்டம்!! பெண் எம்பிக்கள் மீது புகார்! சபாநாயகர் ஓம் பிர்லா குற்றச்சாட்டு!!
''லோக்சபாவில் பிரதமர் மோடியை எதிர்க்கட்சி எம்பிக்கள் தாக்கக்கூடும் என எனக்கு தகவல் கிடைத்தது. இதனால், அவரை அவைக்கு வர வேண்டாம் என நான் தான் அறிவுறுத்தனேன்,'' என சபாநாயகர் ஓம்பிர்லா கூறியுள்ளார்.
லோக்சபாவில் கடந்த இரண்டு நாட்களாக எதிர்க்கட்சி எம்பிக்களின் தொடர் அமளி காரணமாக சபை நடவடிக்கைகள் முழுமையாக முடங்கியுள்ளன. ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி பதிலுரை அளிக்க இருந்த நிலையில், அவர் அவைக்கு வரவில்லை. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. ராகுல் காந்தி உட்பட பல எம்பிக்கள், பிரதமர் பதில் சொல்ல பயந்து வரவில்லை என்று விமர்சித்தனர்.
இந்நிலையில் சபாநாயகர் ஓம் பிர்லா அதிரடியாக விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது: “நேற்று மற்றும் இன்று அவையில் சில எம்பிக்களின் நடவடிக்கை முன்பு எப்போதும் இல்லாத வகையில் இருந்தது.
சிலர் கரும்புள்ளியாக நடந்துகொண்டனர். சபாநாயகர் அலுவலகத்தில் தவறான முறையில் நடந்துகொண்டனர். நாடே பார்த்தது – பிரதமரின் இருக்கையை நோக்கி எம்பிக்கள் எப்படி சென்றார்கள் என்பதை. பிரதமரை தாக்கக்கூடும் என்ற தகவல் எனக்கு கிடைத்தது.
இதையும் படிங்க: லோக்சபாவில் வரலாற்று அவமானம்!! பழிக்கு பழி தீர்த்த காங்.,! மன்மோகன் சிங்கிற்கு நடந்ததை மோடிக்கு கொடுத்து பதிலடி!
இதுபோன்ற சூழ்நிலை ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் பிரதமர் மோடியை லோக்சபாவுக்கு வர வேண்டாம் என்று நான் அறிவுறுத்தினேன்.”
மேலும் அவர் கூறினார்: “அவையை சுமூகமாக நடத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். அவைத் தலைவர் லோக்சபாவில் பேசாதது முறையல்ல. ஆனால் இதுபோன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக்காமல் தடுத்ததற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.”
இந்த விளக்கம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காலையில் சபை கூடியதுமே 'ராகுல் காந்தியை பேச அனுமதிக்க வேண்டும்' என்று காங்கிரஸ் எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டது. மாலை 5 மணிக்கு பிரதமர் பதிலுரை அளிக்க சபை கூடியபோதும் அமளி தொடர்ந்ததால் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
எதிர்க்கட்சிகள் இதை 'பிரதமர் பதில் சொல்ல பயந்து தவிர்த்தார்' என்று விமர்சித்தன. ஆனால் சபாநாயகரின் இந்த வெளிப்படையான கருத்து பிரதமரின் பாதுகாப்பு மற்றும் அவை ஒழுங்கு குறித்து பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது. நாடாளுமன்றத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பதற்றம் நிலவியதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த சம்பவம் எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளும் கட்சி இடையேயான மோதலை மேலும் தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பிரதமர் மோடி பதிலுரை மிஸ்ஸிங்! ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றம்!