×
 

"தமிழகத்தில் தாமரை மலர்ந்துவிட்டது!" - மயிலாப்பூரில் தமிழிசை சௌந்தரராஜன் அதிரடி!

மயிலாப்பூரில் அமித்ஷாவின் ரோடு ஷோவில் கூடிய கூட்டமே தமிழகத்தில் தாமரை மலர்ந்துவிட்டதற்கான சான்று என பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் இறுதிக்கட்ட அனல் பறக்கும் பிரச்சாரத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், சென்னை மயிலாப்பூர் தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன், இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்ட பிரம்மாண்ட 'ரோடு ஷோ' (Road Show) நிகழ்விற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது திமுக அரசு மீதும், முதலமைச்சர் ஸ்டாலின் மீதும் அவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

மயிலாப்பூரில் அமித்ஷா நடத்திய ரோடு ஷோவில் திரண்ட மக்கள் கூட்டத்தைச் சுட்டிக்காட்டிப் பேசிய தமிழிசை கூறியதாவது, இன்று மயிலாப்பூரில் கூடியுள்ள மக்கள் கூட்டமே, தமிழகத்தில் தாமரை மலர்ந்துவிட்டது என்பதற்குச் சான்றாகும். திமுக அரசை வீட்டிற்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டார்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத்தில் மாபெரும் வெற்றியைப் பெறுவது உறுதி," எனத் தெம்பாகக் கூறினார்.

முதலமைச்சர் ஸ்டாலின் சென்னைக்கு அளித்துள்ள புதிய வாக்குறுதிகள் குறித்து அவர் சாடியபோது, சிங்காரச் சென்னை என ஸ்டாலின் தொடர்ந்து சொல்லி வருகிறார். ஆனால் இதுவரை சென்னைக்கு என்ன செய்தீர்கள்? இன்று மீண்டும் பல வாக்குறுதிகளை அளித்துள்ளார். சென்னையில் மக்களுக்கான அடிப்படைப் பிரச்சனைகள் இன்னும் தீர்க்கப்படாமல் பல உள்ளது.

இதையும் படிங்க: தேர்தல் 2026: சமூக ஊடக விதிமீறல்கள் மீது இந்தியத் தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை!

மக்கள் நலனில் அக்கறையில்லாத அரசாகவே ஸ்டாலின் அரசு செயல்பட்டு வருகிறது. மக்கள் திமுக அரசை அதிகாரத்தில் இருந்து அகற்றுவது இப்போது உறுதியாகிவிட்டது. நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்துப் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், திமுகவின் நிலைப்பாட்டைக் கடுமையாக விமர்சித்தார்:

"முதலமைச்சர் ஸ்டாலினின் தவறான வழிகாட்டுதலால் தான் கனிமொழி எம்பி போன்றோர் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான மசோதாவிற்கு எதிராக வாக்களித்தார்கள். பெண்களின் உரிமைகளைத் தடுத்த திமுக அரசை, தமிழகப் பெண்கள் இந்தத் தேர்தலின் மூலம் ஆட்சியில் இருந்து வெளியேற்றுவார்கள்," என எச்சரித்தார்.

உள்துறை அமைச்சரின் வருகை சென்னை பாஜகவினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழிசையின் இந்த ஆவேசப் பேச்சு தேர்தல் களத்தில் அனலைக் கூட்டியுள்ளது.

 

இதையும் படிங்க: பெண்கள் உரிமையை பறித்த ஸ்டாலின் கூட்டணியை வீழ்த்துவோம் - திருச்செங்கோட்டில் எடப்பாடி பழனிசாமி அதிரடி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share