ரெடியா மக்களே! இனி தான் ஆட்டம் ஆரம்பம்...2 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது!
இந்திய நிலப்பரப்பை ஒட்டிய 2 பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வரும் 22 ஆம் தேதி வரை மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்து இருந்தது. வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் தெற்கு குஜராத் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு மேல் அடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் கூறப்பட்டது.
அதே பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாக்க கூடும் என்றும் இது வடக்கு வட மேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் வலுவடைய கூடும் என ஏற்கனவே வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், இந்திய நிலப்பரப்பை ஒட்டிய 2 பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: உஷார் மக்களே..! புரட்டி எடுக்க போகும் மழை.. வலுவானது காற்றழுத்த தாழ்வு பகுதி..!
தெற்கு குஜராத் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குறைந்த காற்று அழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாகவும், தென்மேற்கு வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டி கங்கை நதி மேற்கு வங்கத்திலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது அடுத்த 24 மணிநேரத்தில் வலுப்பெற்று மேற்கு, வடமேற்கு நோக்கிர நகர வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கின்றது.
இதையும் படிங்க: வெயிலுக்கு லீவு.. விளாசப்போகும் மழை.. எந்த ஊர்ல தெரியுமா?