ஈரக்குலையே நடுங்குதே! அப்பளம் போல் நொறுங்கிய கார்...8 பேர் பலியான பெரும் சோகம்!
புனேவில் நடந்த சாலை விபத்தில் ஒரு பெண் உட்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ஜெஜூரி-மோர்கான் சாலையில் கார் ஒன்று சென்றுள்ளது. அப்போது காரும் பிக் அப் டிரக்கும் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் ஒரு பெண் உட்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேர் காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: கண்ணிமைக்கும் நேரத்தில் கோர விபத்து.. அஜாக்கிரதையால் பறிப்போன உயிர்கள்..!
மேலும், உயிரிழந்தவர்கள் உடல்களை மீட்டு அவர்களின் விவரங்கள் குறித்து ஜெஜூரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: ராகுல் காந்தி ஆதாரமில்லாமல் குற்றம் சாட்டுகிறார்... தேவேந்திர பட்னாவிஸ் தரமான பதிலடி!!