ஒரு பிரதமர் இவ்ளோ பொய் பேசக்கூடாது! பிரதமர் மோடியை பொளந்து கட்டிய கார்கே.!
கடந்த 65 ஆண்டுகளாக நான் அரசியலில் இருக்கிறேன். ஆனால் ஒரு பிரதமர் இவ்வளவு பொய் சொல்லி மக்களை ஏமாற்றுவதை நான் பார்த்ததில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.
கடந்த 2014-19-இல் பிரதமர் மோடியின் முதலாவது ஆட்சிக்காலத்தில் அதிமுக எம்.பி. தம்பிதுரை மக்களவைத் துணைத் தலைவராக பொறுப்பு வகித்தார். அதன்பின்னர், எந்தவொரு கட்சிக்கும் அந்தப் பதவி வழங்கப்படவில்லை. தொடர்ந்து காலியாகவே இருக்கிறது.
இந்த நிலையில், அரசியலமைப்பு சட்டப் பிரிவு 93-ஐ மேற்கோள்காட்டி, மக்களவைத் தலைவர் பொறுப்பும், துணைத் தலைவர் பொறுப்பும் நியமிக்கப்பட வேண்டியது கட்டாயம் என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: மக்களவையில் துணை சபாநாயகர் பதவி காலியாக இருப்பது தொடர்பாக நிலவும் மிகவும் கவலைக்குரிய விஷயத்தை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவருவதற்காக நான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். அரசியலமைப்புச் சட்டத்தின்படி, துணை சபாநாயகர், சபாநாயகருக்குப் பிறகு அவையின் இரண்டாவது மிக உயர்ந்த தலைமை அதிகாரி ஆவார்.
இதையும் படிங்க: அமெரிக்காவுல இந்தியனை இப்படியுமா கொடுமை படுத்துவாங்க..? ட்ரம்பிடம் மோடி கட்டாயம் பேசணும்.. காங்., கவலை..
அரசியலமைப்புச் சட்டத்தின் 93-வது பிரிவின்படி, மக்களவை சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகராக இரண்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கலாம். மேலும் இரண்டு பதவிகள் காலியாகும் போது, மற்றொரு உறுப்பினர் அந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்.
பாரம்பரியமாக, புதிதாக அமைக்கப்பட்ட மக்களவையின் இரண்டாவது அல்லது மூன்றாவது அமர்வில் துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தத் தேர்தலுக்கான நடைமுறை சபாநாயகரின் நடைமுறையைப் பிரதிபலிக்கிறது.
ஒரே வித்தியாசம் என்னவென்றால், மக்களவையில் நடைமுறை மற்றும் நடத்தை விதிகளின் விதி 8(1) இன் படி, துணை சபாநாயகர் தேர்தலுக்கான தேதி சபாநாயகரால் நிர்ணயிக்கப்படுகிறது. முதல் மக்களவை முதல் 16-ஆவது மக்களவை வரை, ஒவ்வொரு சபையிலும் ஒரு துணை சபாநாயகர் இருந்துள்ளார். பொதுவாக, பிரதான எதிர்க்கட்சி உறுப்பினர்களிடமிருந்து துணை சபாநாயகரை நியமிப்பது என்பது நன்கு நிறுவப்பட்ட ஒரு மரபு.
இருப்பினும், சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதல்முறையாக, இந்தப் பதவி தொடர்ச்சியாக இரண்டு மக்களவை பதவிக் காலங்களுக்கு காலியாகவே உள்ளது. 17-ஆவது மக்களவையின் போது எந்த துணை சபாநாயகரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. மேலும் இந்த முன்னுதாரணமானது தற்போது நடைபெற்று வரும் 18-ஆவது மக்களவையிலும் தொடர்கிறது.
இந்தப் பதவியை காலியாக வைத்திருப்பது இந்தியாவின் ஜனநாயக அரசியலுக்கு நல்லதல்ல. மேலும் அரசியலமைப்பின் நன்கு வடிவமைக்கப்பட்ட விதிகளை மீறுவதாகும் என அந்தக் கடிதத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த காங்கிரஸ் தலைவர் மல்லீகார்ஜூன கார்கே, பிரதமர் மோடி எப்போதும் ஜனநாயகம், ஜனநாயகம் என்றுதான் சொல்வார். சுதந்திரத்திற்குப் பிறகு, எந்தப் பிரதமரும் துணை சபாநாயகர் பதவியை காலியாக வைத்திருக்கவில்லை, ஆனால் அவர் அந்தப் பதவியை காலியாக வைத்திருக்கிறார். மோடியின் இந்தச் செயல் சட்டவிரோதமானது, ஜனநாயக விரோதமானது.
துணை சபாநாயகர் பதவியை, ஒரு சிறிய பதவியைக் கூட அவர் கொடுக்க விரும்பவில்லை. இது அவருக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை என்பதைக் காட்டுகிறது. அதனால்தான் அரசியலமைப்பின் படி அது வழங்கப்பட வேண்டும் என நான் அவருக்கு கடிதம் எழுதியுள்ளேன். இந்த நாட்டில் அரசாங்கம் அரசியலமைப்பின் கீழ் இயங்குகிறது என்பதை அவர் அறிந்திருக்க வேண்டும்.
கடந்த 65 ஆண்டுகளாக நான் அரசியலில் இருக்கிறேன். ஆனால் ஒரு பிரதமர் இவ்வளவு பொய் சொல்லி மக்களை ஏமாற்றுவதை நான் பார்த்ததில்லை. அவர் எல்லாவற்றிலும் பொய் சொல்கிறார். அவர் ஒருபோதும் தனது தவறை ஒப்புக்கொள்ளவில்லை. முந்தைய அரசாங்கத்தின் பங்களிப்பு (உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரெயில் திட்டம்) பற்றி அவர் எதுவும் சொல்லவில்லை. நான் ரெயில்வே மந்திரியாக இருந்தபோது, அங்கும் வடகிழக்கு பகுதிக்கும் அதிகபட்ச நிதியை வழங்கினேன். நாங்கள் செய்யும் பணிகளுக்கு அவர் (பிரதமர் மோடி) அதை முன்னெடுத்துச் சென்று திறந்து வைக்கிறார் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: பாகிஸ்தான் முகத்திரையை கிழிச்சாச்சு.. நாடு திரும்பிய எம்.பிக்களை தட்டிக்கொடுத்து பாராட்டிய பிரதமர் மோடி..