×
 

'அமரர் முகுந்த்’ நினைவை நிலைநிறுத்தும் தமிழகம்..! மேஜர் பெற்றோரை சந்தித்த அமைச்சர் சரத்குமார்..!

மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் பெற்றோரை அமைச்சர் சரத்குமார் சந்தித்தார்.

சென்னையின் முக்கிய பிரதான சாலைகளில் ஒன்றான 16 கிலோமீட்டர் நீளமுள்ள வேளச்சேரி-தாம்பரம் உயர்வேகச் சாலை (Velachery-Tambaram High Road) விரைவில் மேஜர் முகுந்த் வரதராஜன் சாலை என்று அழைக்கப்பட இருக்கிறது. தாம்பரம் மாநகராட்சி கவுன்சில் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியது. இந்த முடிவு இந்திய ராணுவ வீரரின் தியாகத்தையும், சென்னையுடனான அவரது ஆழமான தொடர்பையும் நினைவுகூரும் வகையில் முக்கியத்துவம் பெறுகிறது. மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் பெற்றோரை அமைச்சர் சரத்குமார் சந்தித்தார்.

மேஜர் முகுந்த் வரதராஜன் 1983 ஏப்ரல் 12 அன்று கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் பிறந்தார். அவரது தந்தை ர. வரதராஜன் பொதுத் துறை வங்கியில் பணியாற்றியதால், முகுந்தின் சிறு வயதில் குடும்பம் சென்னை அருகே தாம்பரத்துக்கு இடம்பெயர்ந்தது. அவர் பேராசிரியர்கள் காலனியில் வளர்ந்தார்.  BPO-வில் சிறிது காலம் பணியாற்றிய பின்னர், தனது குழந்தைப் பருவக் கனவை நனவாக்கும் வகையில் அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் சேர்ந்தார்.

2006-ல் 22 ராஜ்புத் ரெஜிமெண்டில் லெப்டினெண்டாக நியமிக்கப்பட்ட முகுந்த், பின்னர் கேப்டன், மேஜர் பதவிகளுக்கு உயர்ந்தார். லெபனான் ஐ.நா. பணியிலும் ஈடுபட்டிருந்த அவர், 2012-ல் ஜம்மு-காஷ்மீரில் 44 ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் பட்டாலியனுக்கு மாற்றப்பட்டார். 2013 ஜூனில் ஷோபியான் பகுதியில் தீவிரவாதத் தாக்குதலின்போது ஜெய்ஷ்-இ-முகமது தளபதி அல்தாஃப் பாபாவை அழித்த வீரச் செயலுக்கு பெயர் பெற்றார். 

இதையும் படிங்க: திக்...! திக்...!! பயத்தில் திமுக... வெள்ளை அறிக்கை வெளியீடு எப்போது?... நிதி அமைச்சர் மரிய வில்சன் அதிரடி அறிவிப்பு...!

2014 ஏப்ரல் 25 அன்று நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையில் அவரது வீரம் உச்சம் தொட்டது. காஷ்மீரின் காஜிபத்ரி கிராமத்தில் தீவிரவாதிகள் மறைந்திருந்த இடத்தை முற்றுகையிட்டபோது, முகுந்த் தலைமையில் இரு பேர் கொண்ட குழு செயல்பட்டது. லஷ்கர்-இ-தொய்பா உட்பட மூன்று தீவிரவாதிகளை அழித்த அவர், கடும் துப்பாக்கிச் சண்டையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்தார். 

மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் பெயரை தாம்பரம் வேளச்சேரி சாலைக்கு சூட்டுவதாக மாநகராட்சி கூட்டத்தை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து முகுந்த் வரதராஜனின் பெற்றோரை மனிதவள மேம்பாட்டு துறை மற்றும் முன்னாள் படைவீரர் நலத்துறை அமைச்சர் சரத்குமார் இன்று சந்தித்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,

முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் N.ஆனந்த்  வழிகாட்டுதலின்படி தாம்பரம் வேளச்சேரி சாலைக்கு மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர் மாற்றம் செய்ய வேண்டுமென மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் மேஜர் முகுந்த் வரதராஜனின் தந்தை வரதராஜன் தாயார் கீதா மற்றும் சகோதரி ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன் என்று கூறினார். 

இதையும் படிங்க: நிரந்தர எதிர்க்கட்சி திமுகவா.? பரபரக்கும் பனையூர்..! தவெகவுக்கு கூடும் மவுசு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share