×
 

பாவம் தமிழர்கள்... இப்படி செய்யாதீங்க! ரேகா குப்தாவுக்கு முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு கடிதம்!

டெல்லி தமிழர் பிரச்சினை தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தை டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தாவிடம் டி.ஆர் பாலு வழங்கினார்.

தென்கிழக்கு டெல்லியில், ஜங்க்புரா பகுதியில் உள்ள மதராசி முகாம் என்ற குடியிருப்பு பகுதியில், 60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழர்கள் குடும்பங்களாக வசித்து வந்தனர். இந்தப் பகுதி, பாராபுல்லா கழிவு நீர் கால்வாய் அருகே அமைந்துள்ளது. டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், இந்த குடியிருப்புகள் புல்டோசர்கள் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. கழிவு நீர் கால்வாய் அடைப்பை சரிசெய்ய இந்த இடிப்பு அவசியம் என்று கூறப்பட்டது.

மதராசி முகாமில் வசித்த தமிழர்கள், பெரும்பாலும் அருகிலுள்ள வீடுகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள். இவர்கள் மூன்று தலைமுறைகளாக அந்த பகுதியில் வாழ்ந்து வந்தனர். அவர்கள் வசித்து வந்த வீடுகள் இடிக்கப்பட்டதால் வாழ்வாதாரம் இழந்து தங்களது பிள்ளைகள் கல்வி கற்பதில் கூட சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். இந்த நிலையில் டெல்லி தமிழர்கள் பிரச்சினை குறித்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தாவுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

இதையும் படிங்க: இத செஞ்சா ஆட்சியை பிடிக்கலாம்! முதல்வர் சொன்ன #TOP SECRET..!

181 தமிழ் குடும்பங்களுக்கு மாற்று இடம் வழங்கவில்லை என்றும் வீடுகளை இழந்த குடும்பங்களை சேர்ந்த குழந்தைகளையும் கல்வி பாதிக்கக் கூடாது எனவும் அந்த கடிதத்தில் கூறியுள்ளார். பல தசாப்தங்களாக டெல்லியில் வசித்து வந்த 370 தமிழ் வம்சாவளி குடும்பங்கள் வீட்டற்றவர்களாக, ஆதரவற்றவர்களாக மாறி உள்ளனர்.,இந்த 370 தமிழ் வம்சாவளி குடும்பத்தினரும் டெல்லியின் பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து வருவதாக கூறியுள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தை திமுக மக்களவைக் குழு தலைவர் டி ஆர் பாலு டில்லி முதலமைச்சர் ரேகா குப்தாவிடம் வழங்கினார்.

இதையும் படிங்க: அனைவருக்கும் தைரியமும் பலமும் கிடைக்கட்டும்! குஜராத் விபத்துக்கு மாநில முதல்வர்கள் வருத்தம்...

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share